LATEST POSTS


  • “நீர் விளையாடேல்”

    “நீர் விளையாடேல்” இது அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி நூலில் இடம்பெறும் 69-வது அறிவுரையாகும். மேலோட்டமான பொருள் :“நீரில் தேவையின்றி விளையாடாதே”   ஆழம் அறியாத நீர்நிலைகளில் இறங்கி விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, நீர்நிலைகளில் கவனமின்றி விளையாடி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதே இதன் வெளிப்படையான அறிவுரையாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் நீர் விளையாட்டு என்பது பாதுகாப்பான சூழலில் ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கிறது. எனவே, இந்த அறிவுரையை வெறும் புறப்பொருளாக…

    Read more

  • பைரவரின் அருள்-17-விஜ்ஞான பைரவ தந்திரம்- ஸ்லோகம் 66–73 ன் சாராம்சம்.

    பைரவரின் அருள்-17-விஜ்ஞான பைரவ தந்திரம்- ஸ்லோகம் 66–73 ன் சாராம்சம்.மனதின் இயல்பு பொதுவாக உற்சாகம் அல்லது தொய்வு என்னும் இரு நிலைகளுக்கிடையில் எப்போதும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. நமக்கு உருவாகும் சூழ்நிலைகளை எதிர்மறையாகப் பார்க்கும்போது, அவை கவலை, துன்பம், அச்சம் போன்ற எண்ணங்களாக வெளிப்படுகின்றன. அதன் பின்னணியில் மனதில் ஒரு வகையான தொய்வு உருவாகிறது. அதே சூழ்நிலைகளை நேர்மறையாகப் பார்க்கும்போது, அவை மகிழ்ச்சி, ஆனந்தம், அச்சமின்மை நிறைந்த எண்ணங்களாக வெளிப்படுகின்றன. அதன் பின்னணியில் மனதில் ஒரு வகையான உற்சாகம்…

    Read more

  • பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62

    பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62यत्र यत्र मनो याति बाह्ये वाभ्यन्तरेऽपि वा ।तत्र तत्र शिवावस्था व्यापकत्वात् क्व यास्यति ॥பொருள்:மனம், வெளிப்புறத்திற்கோ அல்லது உள்புறத்திற்கோ எங்கு சென்றாலும், அங்கேயே சிவநிலை உள்ளது. ஏனெனில் சிவம் எங்கும் நிறைந்திருக்கிறது; ஆகவே மனம் எங்கு சென்றாலும் அது சிவத்திலிருந்து பிரிந்து வெளியே செல்ல முடியாது. பொருள் விளக்கம்:பிருஹதாரண்யக உபநிஷதம்: 3:7:20 ல் ரிஷி யாக்யவல்க்கியர் இவ்வாறு கூறுகிறார்:“யார் மனத்தில் உறைகிறாரோ,…

    Read more

  • திருக்குறள் 1072 – மெய்ப்பொருள் விளக்கம்: 

    திருக்குறள் 1072 – மெய்ப்பொருள் விளக்கம்: அதிகாரம்: கயமைநன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர். பொதுப்பொருள்நன்மை எது, தீமை எது என்பதை அறிந்தவர்களைவிட, கயவர்களே நல்ல பேறு உடையவர்களாகத் தோன்றுகின்றனர். ஏன் என்றால், அவர்களுடைய நெஞ்சத்தில் எதைப் பற்றியும் கவலை இல்லை. சொற்பொருள்,:அவலம் – குற்றம், பலவீனம், கவலை.திரு – தெய்வத்தன்மை, செல்வம், பாக்கியம். மெய்ப்பொருள்நன்மை எது, தீமை எது என்பதை அறிந்தவன், நன்மையைத் தேர்ந்தெடுத்து செயல்படுகிறான். ஆனால் அவனுடைய மனதில் நன்மையோடு, தீமையின் விளைவுகள்…

    Read more

  • பைரவரின் அருள் – 15- விஜ்ஞான பைரவ தந்திரம் – ஸ்லோகம்: 47

    பைரவரின் அருள் – 15- விஜ்ஞான பைரவ தந்திரம் – ஸ்லோகம்: 47सर्वं देहगतं द्रव्यं वियद्व्याप्तं मृगेक्षणे ।विभावयेत्ततस्तस्य भावना सा स्थिरा भवेत् ॥ ४७ ॥பொருள்:“மான் போன்ற அழகிய கண்களை உடைய தேவியே!இந்த உடலுக்குள் உள்ள அனைத்துப் பொருள்களும், ஆகாசத்தால் — எல்லையற்ற வெளி உணர்வால் — முழுமையாக வியாபிக்கப்பட்டிருப்பதாகத் தியானிப்பாயாக. அவ்வாறு தொடர்ந்து பாவனை செய்தால், அந்தப் பாவனை நிலைபெற்று, பிரக்ஞை உறுதியாக நிலைக்கும்.”பொருள் விளக்கம்:இங்கே பைரவர் நமக்கு ஒரு ஆழமான…

    Read more

  • திருக்குறள் 1168 – மெய்ப்பொருள் விளக்கம்:

    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை.— திருக்குறள் 1168: இன்பத்துப்பால் – அதிகாரம் 117 மேலோட்டமான பொருள்:உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் உறங்கச் செய்து அமைதியை அளிக்கும் இரவே! என்னைத் தவிர உனக்கு வேறு துணை யாரும் இல்லை. இது, காதலனைப் பிரிந்த தலைவி, உலகத்தையே உறங்கிவிட்ட அந்த இரவிற்கு தான் மட்டும் துணையாக இருந்து தனிமையில் விழித்திருப்பதாகக் கூறும் அகப்பொருள். மெய்ப்பொருள் – ஓர் ஆன்மீகப் பார்வை:இந்தக் குறளை நாம் இன்னொரு ஆழமான கோணத்தில்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்