LATEST POSTS
-
You Are That! -” A True Brahmin”
திருமந்திரம் #பாடல் #226: “காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே“ #விளக்கம்: ‘காயம்‘ என்பதற்கு ‘உடம்பு‘ என்று பொருள் கொள்ளலாம். பஞ்ச பூதங்களின் திரிபே ‘காயம்‘ எனும் உடலாக மாறியுள்ளது. ‘காயம்‘ மீண்டும திரிந்தால் அவை பஞ்ச பூதங்களின் தன்மையாகவே இருக்கும். காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சாவித்திரி, உருவமற்ற கடவுளின் பெண் ஆற்றல்மிக்க சக்தி. அச் சக்தியை தியானிக்க இரண்டு…
-
“ஸத்யஸ்ய ஸத்யமிதி”
பட்டினத்தார் பாடல்: “மூச்சு என்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார் பேச்சு என்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே“ பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, விநாயகர், முருகன், திருமகள் என்னும் பேர் கொண்ட இறைவன்மார்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயிரம் நாமங்கள் அனைவரும் அறியும்படியாகாவே உள்ளன. அவ்வாறு இருந்தும் பட்டினத்தார் பூரணத்தின் பேரை அறிந்தவர் யார் உளர்! என்பதாக ஏன் பாடியுள்ளனர்? பிருஹதாரணியகோபநிஷத்து:1.20 சிலந்திப்பூச்சி (தன்னிடமிருந்துண்டான) நூலின் வழியே எங்ஙனம் வெளிக்கிளம்புகிறதோ, நெருப்பிலிருந்து உண்டான சிறு…
-
You Are That! -“The one only one”
திருமூலரின் திருமந்திரம்:1789. “அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவனிவன் ஆமே”. “அவனும் அவனும் அவனை அறியார்” மானுடப் பிறவியாக உருவெடுத்த இவ்வுயிரையும் (அவனும்) இவ்வுடம்பையும் (அவனும்) பிணைத்துக் கட்டியிருக்கும் உயிருக்கு உயிராய் விளங்கிக் கொண்டிருக்கும் அவனை ஒருவரும் அறியார்…. “அவனை அறியில் அறிவானும் இல்லை” அத்தகைய உயிருக்கு உயிரான அவனை (சிவனை) அறிந்தபின் அங்கு அறிவு, அறியப்படும்பொருள், அறிபவன் என்னும் மூன்று தன்மைகளும்…
-
You Are That! -“இனியான்”
அப்பர் பெருமான் அருளிய:தேவாரம். “என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்துபுக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”. “என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன்” அப்பர் பெருமான் சிவசிந்தனையைத் தவிர புறசிந்தனைக்கு தம் உள்ளத்தில் இடம் கொடாததினால் இனிமை உள்ளவராக எவருமே அப்பர் பெருமானுக்கு இருக்க இயலாது. அப்படிப்பட்ட அப்பர் பெருமான் உள்ளத்திலும், அவரைக் காட்டிலும் இனிமை கொண்டவராக ஒருவன் இருந்து கொண்டிருக்கிறான், அவன் யாரெனின்? என்னுளே…
-
You Are That! -“unadulterated soul”
திருஞானசம்பந்தர் தேவாரம்: வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும் ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி நானம ரும்பொரு ளாகிநின்றான் றிருநாரை யூரெந்தை கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே. 3949. பொ-ரை: ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அதாவது உயிர் தெய்வத்தன்மை கொண்டதாக இருந்தபோதிலும் “நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள…
-
திருவாசகம்/சிவபுராணம்-4
“உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற” திருவாசம்: சிவபுராணம் பதப்பொருள் : உய்ய – நான் உய்யும்படி, என் உள்ளத்துள் – என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற, விளக்கம் : ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்கும். மணிவாசகப் பெருமானின் திரு உருவம் ஓங்காரதின் ‘அ’ வென்னும் அகார ஒலியாக இறைவனால் முன்னரே படைக்கப்பட்டு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

