LATEST POSTS
-
You Are That!- “source of energy”
“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு”. குறள் 27: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம் என்பது இக்குறளின் பொதுப்பொருள். வகை: என்பதிற்கு தன்மை என்று பொருள். அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. பொருளும் அதன் தன்மையும் பிரித்துப் பார்க்க இயலாது. மேலும் எந்தவொரு பொருளும் தனித்தும் நில்லாது, வேறு ஒரு மூலப் பொருளில் அடங்கியே இருக்கும்.…
-
You Are That!- “hunger reliever”
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி”. குறள் 226: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். அற்றார்: என்பதிற்கு (ஏற்கும் மனம் இல்லாத) பொருள் இல்லாதவர் என்று பொருள் கொள்ளலாம். அழிபசி: என்பது கடும் பசி என்று பொருளாகிறது. கடும் பசி உண்டாகும் தருணத்தில் பட்டினியால் கண்பஞ்சடைந்து, பார்வை மங்கி அத்தகையவர் வானத்தை நோக்கினால்…
-
You Are That!- “All Praise to the LORD”
“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பது இறைவனுக்கேயுரிய வாசகம்! எவ்வாறு எல்லா புகழும் இறைவனுகே உரித்தாகின்றது ? ஆத்ம சொரூப இலக்கணம் பற்றி ரிஷி ஸ்ரீ யாக்ஞவல்கியர் அவர்களால் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘ it’s unseen, but seeing; unheard, but hearing; unperceived, but perceiving; unknown, but knowing. There is no other seer but he, there is no other hearer but he, there is no…
-
You Are That!- “good valuer”
“சான்றோர் இனத்து இரு”- ஆத்திச்சூடி 45 “சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை”. சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். சான்றாண்மை என்னும் குணத்தின் பண்பு யாதெனின் அஃது மனித குலத்தில் யாரிடம் குடிகொண்டிருந்ததாலும், அத்தகையவரை விட்டு எச்சூழழிலும் விலகாது இருத்தலேயாகும். அதாவது சான்றாண்மை மேற்கொள்பவர்கள் ஒருபோதும் இவ்வரிய பண்பு குறைவுபட தாங்கள் காரணமாகமாட்டார்கள். இரு என்பதிற்கு இரண்டு என்று…
-
You Are That!- “immortality”
“வீடு பெற நில் “- ஆத்திச்சூடி புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துவது யாதெனின்? இவ்வுடம்பினுள் நிலையான இருப்பிடம் நாடி குடிகொண்டிருக்கும் இவ் உயிரானது, இதற்கு முன்னரும் இதுபோன்றே நிலைபெறும் பொருட்டு அநேக தேகங்களில் வசித்து வந்துள்ளது என்பதும் புலனாகின்றது! ஏனெனில் எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர்…
-
You Are That!- “continuous delighter “
“மனம் தடுமாறேல்” ஆத்திச்சூடி -88 “இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்”. குறள் 369: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும் என்பது இக்குறளுக்கு பொதுப்பொருள். ‘அவா’ என்னும் சொல்லுக்கு ‘பெருவிருப்பம்’ கொள்ளுதல் என்று பொருள். அதாவது ஒரு பொருளின் மீது ஏற்ப்படும் அவா-வானது அஃதினை தன்வயமாக்குதல் என்னும் இலக்கிற்கு உள்ளாக்கி, மனதை இன்பத்தில் திளைக்கச்செய்வதே ஆசையென்னும் அவா-வின் இயல்பாய் இருக்க! மாறாக இங்கு வள்ளுவர் பிரான் ‘அவாவென்னும் துன்பத்துள்’…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

