LATEST POSTS
-
You Are That! – “saver of lifes”
“கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே”. அருட்பெருஞ்ஜோதி அகவல் (968) “கொல்லா நெறி” என்றால் மற்ற உயிர்களை கொல்லாமை மட்டுமே அன்று. இத்தேகத்தில் குடிகொண்டிருக்கும் உயிருக்கும் எவ்விதத்திலும் ஊறு விளைவிக்காமல் இருத்தலே ஆகும். ‘ஆக்கம்’ என்று ஒன்று இருந்தால் ‘அழிவு’ என்பதும் நிச்சயம் இருக்கும். ஆக்கம் என்னும் மாய தோற்றம் மறைந்தால் அங்கு அழிவு என்பது இல்லாமலேயே போய்விடும். இத்தகைய நிலையே “கொல்லா நெறி”. அதாவது எக்காலத்தும் எந்நிலையிலும் கடைபிடிக்கும் நெறியாகும். இவ்-அருள்…
-
You Are That! – “Noble character”
“உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.” அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்:குறள் 105 பொதுப்பொருள்: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். மெய்ப்பொருள்: ‘உதவி செயப்பட்டார்’ என்பதற்கு உதவி செய்தவர் மற்றும் செயப்பட்ட அவ்-உதவியை பெற்றவர் என்னும் இருவரையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம். எவரொருவருக்கு தாம் செய்த உதவியை அக்கணமே மறக்க இயலுமோ, அத்தகையவர்க்கு கைமாறு கருதும் எண்ணமும் மனதில் எழவே…
-
You Are That! – “shapeless”
“உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்ச்சபையில் அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(77) ‘உபயம்’ என்பது இரண்டு என்னும் சொல்லை குறிப்பது. ஒரு நாணயத்துக்கு வெவ்வேறு உருவங்கள் பொறித்த இரண்டு பக்கங்கள் இருப்பினும், அதன் மதிப்பில் இரண்டும் மறைந்து ஒன்றாய் ஆகிவிடுவது போன்று, தம் தேகம் முன்புறம், பின்புறம் என்று இரு வெவ்வேறு வடிவில், உபய- இரண்டு பக்கங்களாக இருப்பினும், தம் இரு புருவ மத்தியில் உள்ள சிற்ச்சபையில், நிறைந்த ஒளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி… தம் தேகத்தின் உபய…
-
You Are That! – “Honest Eyes”
“நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால். கண்ணல்லது இல்லை பிற”. அதிகாரம் : குறிப்பறிதல்: குறள் 710 மெய்ப்பொருள்: பிறர் மனக்கருத்தை அளந்து அறிய உதவும் கருவி அத்தகையவரின் கண்களேயன்றி வேறு இல்லை. எவ்வாறெனின் கண்கள் தவிர மற்ற உறுப்புகள் மனக்கருத்துக்கு மாறாக இயங்கினாலும், கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது மனக்கருத்தை உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும். அதுபோன்றே பிறர் மனக்கருத்தை அளந்து அறிய முற்படுபவருக்கும், அத்தகையவரின் கண்களிலிருந்து வெளிப்படும் ஒளியினை நேருக்குநேர் தம் கண்களால் கண்டு கிரகிக்கும் திறன் கொண்டிருப்பின்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

