LATEST POSTS
-
You Are That! – “deserving of change”
“சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி” (205) சா-என்பதற்கு சாதல் என்றும், மாறு-என்பதற்கு பிறவி என்றும் பொருள் உள்ளது. ஆ-என்பது அழிவில்லாத ஆன்மாவை குறிக்கும் சொல். மாறு-என்பதற்கு ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல் என்றும் மற்றொரு பொருள் உள்ளது. “சாமாறு அனைத்தும் தவிர்த்து”- இறந்து இறந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதவிதமான பிறவிகளாக மாறி மாறி பிறப்பெடுக்கும் அவலநிலைகள் அனைத்தையையும் நீக்கி, “ஆமாறு”- அழிவற்ற ஆன்மாவாக என்னை மாற்றி அருளிய அருட்பெருஞ்ஜோதி. சாய்ராம்.
-
You Are That! – “pure consciousness”
“உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(317) உருவம், பஞ்சபூத சம்பந்தம் கொண்ட மானுட வடிவமாக விழிப்பு நிலையில் மட்டுமே அறியப்படுகிறது. அருவம், பஞ்சபூத சம்பந்தம் இல்லாத ஆழ்ந்த உறக்க நிலையில் மட்டுமே உணரப்படுவது. உபயம், உருவ மற்றும் அருவத்தின் கலவை. இஃதினில் பஞ்சபூத சம்பந்தம் கொண்ட உருவமும் மறைந்து, அருவமும் மறைந்து, உருஅரு வடிவாக கனவு நிலையில் மட்டுமே அறியப்படுவது. விழிப்பு,உறக்கம், கனவு மூன்றும் அற்ற துரிய நிலையிலேயே, அதாவது உருவமும்,…
-
You Are That! – “Invisible Defender”
“கடலவை அனைத்தும் கரையின்றி நிலையுற அடலனல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்(613) ஏரி, குளம்,ஆறு போன்ற நீர் நிலைகள் யாவும் கரையின்றி அமையாது. அவ்வாறு இருக்க இப்புவியில் 70% அளவிற்கு கடல் நீர் சூழ்ந்து இருந்தாலும், நிலப்பரப்புக்கும் கடலுக்கும் இடையில் எந்தவொரு ‘கரையின்றி நிலையுற’, அடல் என்பதிர்க்கு வலிமை என்றும், அனல் என்பதிர்க்கு கொடிவேலி என்றும் பொருள் உள்ளது. எனவே ‘அடலனல்’ என்பதை வலிமையான கொடி போன்ற வேலி என பொருள் கொள்ளலாம். அதாவது கடலுக்கும் நிலப்பரப்புக்கும்…
-
You Are That! – “vitalizer”
“சாவா நிலை இதுதந்தனம் உனக்கே ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல் (210) ‘சாகும் நிலை’ என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தது செல்வதே. அவ்வாறாயின் ‘சாவா நிலை’ என்பது உடலை விட்டு உயிர் பிரியாத நிலையே என்று பொருள் கொள்ளலாம். அதாவது இம்-மெய்யுடன் (உடம்புடன்) இவ்-உயிர் கலந்து நிற்பதே ஆகும். இதற்க்கு உவமானப் பொருளாக ‘வ்’ என்னும் மெய் எழுத்துடன் ‘ஆ’ என்னும் உயிர் எழுத்து கலந்து வ்+ஆ= ஆவா என மருவி நிற்பது…
-
You Are That! – “knower of intrinsic”
“வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல் (203) ‘ஐயம்’ என்பதற்கு ‘அகப்பொருள்’ என்றும் ஒரு பொருள் உள்ளது. எனவே ‘ஐயறிவு’ என்பதை அகப்பொருளை (மெய்ப்பொருளை) அறியும் அறிவு என்பதாக பொருள் கொள்ளலாம். அதாவது ‘ஐயறிவு’ என்னும் தம் ஐம்புலன்களின் அறிவால் தம் அகத்துனுள் பிரகாசித்துக் கொண்டிருந்த ஜோதியை, அறியும் அறிவை எனக்கருளிய அருட்பெருஞ்ஜோதி என்றும், மேலும் இவ்வருட் பேற்றை பெற்றதினாலேயே வையமும் வானமும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது என்று வள்ளல் பெருமான் பாடியுள்ளனர்.…
-
You Are That! – “expectation absentee”
“எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி”. அருட்பெருஞ்ஜோதி அகவல் (309) ‘அச்சோ’ என்பதிர்க்கு ஒரு வியப்புக்குரிய இரக்கமுள்ள செயல் என்று பொருளாகிறது. வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் உருவாயினும் அஃதினை தமக்கு ஏற்ப்பட்ட சோதனைகளாக கருதாமல், மாறாக அஃதினை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஒருவருக்கு அருளப்படின் ! எதிர்ப்பார்ப்பு ஏதும் அற்றநிலை கிட்டிடும். அத்தகையவர்க்கே, அந்நிலையில் கைகூடிவரும் திருவருளானது, அருட்பெருஞ்ஜோதியின் ‘அச்சோ’ என்னும் கற்பனை கடந்த வியப்புக்குரிய, இரக்கமிகுந்த செயலாக காட்சி அளிக்கும் !!…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

