You Are That! – “saver of lifes”

“கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே”.

அருட்பெருஞ்ஜோதி அகவல் (968)
“கொல்லா நெறி” என்றால் மற்ற உயிர்களை கொல்லாமை
மட்டுமே அன்று. இத்தேகத்தில் குடிகொண்டிருக்கும் உயிருக்கும் எவ்விதத்திலும் ஊறு விளைவிக்காமல் இருத்தலே ஆகும்.

‘ஆக்கம்’ என்று ஒன்று இருந்தால் ‘அழிவு’ என்பதும் நிச்சயம் இருக்கும். ஆக்கம் என்னும் மாய தோற்றம் மறைந்தால் அங்கு அழிவு என்பது இல்லாமலேயே போய்விடும். இத்தகைய நிலையே “கொல்லா நெறி”. அதாவது எக்காலத்தும் எந்நிலையிலும் கடைபிடிக்கும் நெறியாகும்.

இவ்-அருள் நெறியினை குருவருள் நெறியாக பல காலம் எனக்கு பகர்ந்து…


“தோற்றம் என்னும் மாயைத் தொடர்பறுத்து” அழியா பெருநிலைக்கு என்னை உயர்த்தி அதன் வழியே “அருளின் ஆற்றலைக் காட்டிய அருட்பெருஞ்ஜோதி வடிவான மெய்ச்சிவமே” என்னும் மெய்ப்பொருளாக வள்ளல் பெருமான் இவ்-அகவலை இயற்றியுள்ளார்.

“தோற்றமா மாயைத் தொடர்பறுத்து, அருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி”(833)
சாய்ராம்.

Leave a comment