LATEST POSTS
-
You Are That! – “Immeasurable effort”
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு”. (குறள்:610) பொதுப்பொருள்: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். மெய்ப்பொருள்: மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த…
-
You Are That! – “knower of the knowledge”
“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு”. (குறள்:452) பொதுப்பொருள்: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு சேர்ந்த இனத்தின் இயல்பினை உடையதாகும். மெய்ப்பொருள்: நீரின் தனிப்பட்ட இயல்பு சுத்தமே ஆகும், எனினும் அது சேர்ந்த நிலத்தின் இயல்பால் அதன் தன்மையே பறிபோய் விடுவது போன்று… அறிவின் தனித்த இயல்பு தெய்வத்தன்மையுடன் கூடியது, பிரகாசிக்கக் கூடியதே, எனினும் அவ்வறிவு சேர்ந்த உடம்பின் (நிலத்தின்) தன்மையால், அவ்வுடம்பு…
-
You Are That! -“Good Appraiser”
“புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார்”. (குறள்:719) பொதுப்பொருள்: நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம். மெய்ப்பொருள்: மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களுக்கு, அம்-மெய்ப்பொருளை அறிந்து கொண்டவர்களையும், அறிய இயலாதவர்களையும் எளிதில் அடையாளம் காணவும் இயலும். எவ்வாறெனின் அம்-மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடி உணர்ந்தோர் முகத்தில் தென்படும் ‘தெளிந்த அறிவுப்பிரகாசம்’, அத்தகையவரின் புரிந்து கொள்ளும் ஆற்றலை சொல்பவருக்கு…
-
You Are That! – “Quiet speaker”
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்”. (குறள்:28) பொதுப்பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். மெய்ப்பொருள்: நிறை: என்பதற்கு பூர்த்தி, அறிவு மற்றும் அழிவின்மை என்று பொருள் உள்ளது. இத்தகைய பொருள் கொண்ட ‘நிறைமொழி’ என்பது வார்த்தையை பயன்படுத்தாத ஓர் சொல். ஆகவே உலக வழக்கில் பேசப்படும் எதை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் இத்தகைய ‘நிறைமொழி மாந்தர்கள்’ என்பவர்கள் எங்கும் உண்டு. “THERE IS…
-
You Are That! – “Talent Consultant”
“அறிகொன்று அறியான் எனினும் உறுதி. உழையிருந்தான் கூறல் கடன்”.(குறள் 638) பொதுப்பொருள்: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும். மெய்ப்பொருள்: மனத்தினால் வடிவமிக்கப்பட்ட ஒவ்வொரு மனித உருவும் ‘அரசனுக்கு’ ஒப்பானதுதான். இத்தேகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் புத்தி ‘அமைச்சனுக்கு’ ஒப்பானது. மனம் சஞ்சலம் உடையது, தடுமாறும் தன்மை கொண்டது. எவ்வளவுதான் ‘அமைச்சருக்கு’ ஒப்பான புத்தி அறிவுறுத்தினாலும், மனம் புத்தியின் அறிவுரையை ஏற்காது தானும் அறியாதவனாகவே இருந்து, தன்(மனம்) போக்கில்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

