LATEST POSTS
-
You Are That!- “Creator of the desired child”
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்“. “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்“. உலகியலில் ஒரு தந்தை எனப்படுபவர் தனக்கு பிறந்த மகனை நன்கு வளர்த்து ஆளாக்கி, உன்னத நிலைக்கு உயர்வுபெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தந்தையின் கடமையாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே அன்றி இதில் வள்ளுவர் கூறும் “தந்தை மகற்காற்று நன்றி” எனும் நன்றி நவிலுதல் என்பது எவ்வாறு? அதே போல் மகன் எனப்படுபவருக்கும், தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தையை நல்விதமாக பேணி காப்பது என்பது …
-
You Are That!- “A zealous character”
“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு“. உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும். ஆனால் தற்காலத்தில் அறிவுடையோரே அவ்வறிவின் செயல்பாட்டின் மூலம் உலகின் மிகப் பெரும் செல்வந்தராயும் ஆகியுள்ளனரே ? “உடம்பு உயிரெடுத்ததோ உயிரும் உடம்பெடுத்ததோ உடம்பு உயிரெடுத்தபோது உருவம்மது செப்புவீர் உடம்புயிர் இறந்தபோது உயிர் இற்ப்பதில்லையே உடம்பு மெய்மறந்து கண்டுணர்ந்து ஞானம் ஒதுமே“. என்பது சிவவாக்கியர் பாடல். இங்கு வள்ளுவர்…
-
Self enquiry
Ramana Maharishi says: “Everything has to be done in a hurry. Everybody has some train to catch. They visit this swami in a rush and want to carry away a parcel of liberation and salvation. They read something here and there and they think they are learned and ready for liberation. Who wants salvation?…
-
You Are That!- “A benefactor to evil too”
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்“. நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே என்பது இக்குறளின்பொதுப்பொருள். ஒருவர் தமக்கு மற்றொருவரால் இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து, அவருக்கு நன்மை புரிதல் அல்லது அத்தகைய இன்னல்களை இழைத்தவர் தன் தவற்றுக்கு மனம் வருந்தி அந்த நன்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஏனெனில் ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் பொறாமை என்னும் குணமே, இன்னல்களை …
-
You Are That!- “Found the true friend”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”. பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு என்பது இக்குறளின் பொதுப்பொருள். கீதைப் – அத்தியாயம் -6, தியானயோகம், சுலோகம் -(5) தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை என்பது கீதை வாக்கு. ஒருவர் உடலில் இருந்து உடுக்கை நழுவும் பொழுது…
-
You Are That!- “beyond the fate”
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”. இருள்சேர்: இருளில் சேர்வது எது ? ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண் பெண் இருவரது சேர்கை நடப்பது இருளில்தான் இதுவே இருள்சேர் என்பது. இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை குறிப்பதாகும். இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக காரணமாகும் தாய் தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்) பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது. சேரா…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

