LATEST POSTS
-
பைரவரின் அருள்– விக்யான் பைரவ தந்திரம்: ஸ்லோகம்-7
விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 7பண்டைய விக்ஞான பைரவ தந்திரத்தின் ஏழாவது சூத்திரத்தில், ஞானோதயத்திற்கான மற்றொரு நேரடிப் பாதையை சிவன் வெளிப்படுத்துகிறார்:“ஒவ்வொரு ஓசையும் மரித்துப்போகும், ஆனால் மௌனம் நிலைத்திருக்கும். இரைச்சலைத் துரத்துவதை நிறுத்தி, என்றும் நீங்காத ஒன்றில் பிரவேசியுங்கள்.” இதன் விளக்கம்:“கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்”. என்று ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 4: ஸ்லோகம்: 18 ல் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்துள்ளார். இதில்…
-
“தீர்ப்பிடாதீர்கள்”
ஒருவரின் வாழ்க்கை முடியும் வரை அதை மதிப்பிட முடியாது, ஏனெனில் தீமையாகத் தொடங்குவது நன்மையாக முடியலாம் என்பது சுபி ஞானி ஹஜ்ரத் ரூமின் கூற்று. இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் வரும்-அஜாமிலன் சரித்திரத்தை உவமானமாக எடுத்துக் கொள்ளலாம்.அஜாமிலன் முதலில் நல்லொழுக்கம் மிக்க, வேதம் கற்ற ஒரு பிராமணராக இருந்தான். ஒருநாள் ஒரு தாசியுடன் ஏற்பட்ட தொடர்பினால் தவறான வாழ்க்கையில் ஈடுபட்டான். அதன் பிறகு தர்மத்தை விட்டுவிட்டு, திருட்டு, பொய், ஏமாற்றுதல் போன்ற செயல்களால் குடும்பத்தை நடத்தினான். அவனுக்கு பல…
-
“There is nothing but He.”
‘அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்அவனே அஃது உண்டு உமிழ்ந்தான், அளந்தான்அவனே யவனும் அவனும் அவனும்அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே‘.இது நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (9.3.2) பாசுரத்தின் புகழ்பெற்ற வரிகளாகும். . தமிழ் இலக்கணத்தில் தன்னிலை (நான்), முன்னிலை (நீ), படர்க்கை (அவன்) என்பது உண்டு. ‘நான், நீ’ என்று இருக்கும் போதுதான், அதாவது தன்னிலையும், முன்னிலையும் இருக்கும் போதுதான் அங்கு ‘அவன்’ என்பது படக்கையாக சுட்டிக் காட்டப்படும். ஆனால் இங்கு நம்மாழ்வாரால் சுட்டி காண்பிக்கப்படும் ‘அவனே’ என்பது,…
-
மடப்புரம்,ஶ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள்
திருவாரூரில் உள்ள மடப்புரம் என்னும் இடத்தில் ஜீவ சமாதி ஆகி அருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ ஶ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், காரைக்கால் மஸ்தான் சாகிப் என்னும் சுபி ஞானியிடம் கூறிய அருள்வாக்கு இது “சுட்டும் தன்மை மறைந்தால் பரிபூரணமே” என்பது!! ஆம், சுட்டும் தன்மை மறைந்தால்… -அங்கு தேடுபவரும் தேடுதலும் பரிபூரணத்தில் மறைந்து போகும். -குருவை அறிபவரும் ( சீடனும்) அறியப்படும் பொருளும் (குருவும்), தூய அறிவில் மறைந்து போகும். -செய்பவரும் செயபடுப்பொருளும், செயலின்மையின் செயலில் மறைந்து…
-
“சிந்திப்பதும் சொல்வதும்”
“சிந்திப்பதும் சொல்வதும்”ஒரு ஞானி தான் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்வதில்லை, ஆனால் தான் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் சிந்திக்கிறார் என்பது சுபி ஞானி ஹஜ்ரத் ரூமியின் கூற்று. இதன் விளக்கம்:ஆம், முற்றிலும் சரி. ஞானிகள் பேசும்போது, அது தொடர்பான சிந்தனைகள் புற உலகான உணர்வுகளில் மறைந்து விடுகின்றன; அவை மாயையின் உலகத்தைக் குறிக்கின்றன. எனவே, ஞானி அங்கே மௌனம் காக்கிறார். அதாவது ஒரு உண்மை வெளி உலகிற்குள் பேசப்பட்டவுடன், அது தவறான விளக்கம், விவாதம் மற்றும்…
-
“சாக்ஷி ஹயஸ்யோத்ரா ஹி”
“சாக்ஷி ஹய ஸ்யோத்ரா ஹி” என்பது பூஜ்யஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் இருந்து, அப்பணாச்சார்யா என்பவருக்காக வெளிப்பட்ட தெய்வீக குரல். இதன் பொருள். அப்பணாச்சாரியார் கூறிய வாக்குகள் அனைத்தும் உண்மை என்றும், அந்த வரிகளுக்கு முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹயக்ரீவர் சாட்சியாக இருக்கிறார் என்றும் உறுதிப்பட கூறியதே இதற்கு பொருள்.Interpretation:‘விழிப்பு’ நிலை என்பது கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர்கால நினைவுகளின் கலவைகளால் ஆனது . ‘விழிப்புணர்வு’ என்பது இந்- நினைவுகளில் ஒடுங்கிய இம்மூன்று காலம்களுக்கும், அதாவது ஒவ்வொருவரது…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

