LATEST POSTS
-
“இயற்கை மரணம் மற்றும் பாவத்தின் மரணம்.’
“இயற்கை மரணம் மற்றும் பாவத்தின் மரணம்.’“இயற்கை மரணத்தை விட, மக்கள் தங்கள் பாவங்களாலேயே அதிகம் இறக்கிறார்கள்.” ~ ஹஜ்ரத் அலி (அலை) ஆன்மீக நோக்கில் பார்த்தால், மரணம் என்பது வெறும் உயிர் உடலை விட்டு நீங்குவது மட்டுமல்ல. உயிரின் இறுதி நிலை எவ்வாறு அமைகிறது என்பதில்தான் அதன் உண்மையான பொருள் உள்ளது. எது இயற்கை மரணம்?அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில், “உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்” என்று, உயிர் மங்கும் அந்த இறுதி நேரத்தில்…
-
திருவாசகம் / சிவபுராணம்- 8
திருவாசகம் / சிவபுராணம் 8“வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க” — இது மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தில் இடம்பெறும் ஆழ்ந்த ஆன்மீகப் பொருள் கொண்ட வரியாகும். இவ்வரியில் வரும் “வேகம்” என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக, சுக்கில சக்தி அல்லது உயிராற்றலுடன் தொடர்புடைய உந்துதலையும் எடுத்துக்கொள்ளலாம். மாணிக்கவாசகர் வாழ்வில் இறையருள் முழுமையாக வெளிப்படுவதற்கு முன், அவர் திருமணம் ஆகாத இளமைப் பருவத்தில் இருந்தார். பொதுவாக அந்தப் பருவத்தில் மனம் புலனின்பங்களை நோக்கி ஈர்க்கப்படுவது…
-
திருவாசகம் /சிவபுராணம்-7
“வணக்கத்துக்குரியவன் ஒருவனே”“சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”இவை மாணிக்கவாசக பெருமான் அருளிய சிவபுராணத்தின் அனுபவமிக்க வரிகள். பொதுவாக நாம் “நான்”, “நீ”, “அவன்” என்று தன்மை, முன்னிலை, படர்க்கை என வேறுபடுத்திப் பார்க்கிறோம். ஆனால் மெய்ஞானப் பார்வையில், “நான்” என்பதும், “நீ” என்பதும், “அவன்” என்னும் ஒரே பரம்பொருளின் பிரதிபலிப்புகளே அன்றி, தனித்தனி இருப்புக்கள் அல்ல. உண்மையில் எக்காலத்தும் நிலைத்திருப்பது “அவன்” மட்டுமே. அந்த “அவன்” சிவமாகவும், சிவமயமாகவும், எங்கும்…
-
“Self’s Self-Manifestation”
Self’s Self-ManifestationMy praṇas, body, and all worlds are the Guru’s manifestations, shining as the Self, united with the vital essence and divine sound in the navel lotus.When the prāṇas, body, and worlds are regarded as separate from the Self, they belong to the realm of duality and are eventually discarded as alien. But when they…
-
“அந்தர்யாமி (ஆத்மா)”
“அந்தர்யாமி (ஆத்மா)”” யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ॥”கடோபநிஷத் 2.23இதன் பொருள்:“ஆத்மா யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ, அவரால்தான் அது அறியப்படுகிறது; அவருக்கு ஆத்மா தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது.” அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவானது, இருமையற்றது, சுயம் பிரகாசமுடையது. எங்கும் அருளாக வியாபித்திருப்பது. ரிஷி யாக்ஞவல்கியரால் பிருஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், வாஸ்துவத்தில் அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவிற்கு அந்நியமாக ஏதும் இல்லை என்பதால்… இதை இருமை நோக்கில் பார்க்கும்போது, ஆத்மாவும் ஜீவனும் இரு வேறு பொருட்கள் போலத்…
-
“இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”
“இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”ஸத்குருவும், ஒரு உண்மையுள்ள சீடனும் உண்மையில் தனித்தனி நபர்கள் அல்ல! அதுபோன்றே ஸத்குருவும், அந்தர்யாமியும் வெவ்வேறு அல்ல ஒன்றே! பிருஹதாரண்யக உபநிஷதம் 3.7.3 இல், ரிஷி யாக்ஞவல்கியர் அந்தர்யாமியை பற்றி இவ்வாறு கூறுகிறார். “எவர் பூமியில்(நிலத்தில்) இருந்து கொண்டு பூமியில் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்,”என்று. ஒவ்வொரு மனிதர்களின் தேகமும் நிலம், நீர், காற்று,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

