LATEST POSTS


  • You Are That!- “A knowable divine parent”

    ஔவையார் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் நம் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர்கள் என்கின்றது அவ்வையின் ஆத்திச்சுடி. அவ்வாறு அவர்கள் தெய்வங்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகள் அவர்களும் தெய்வங்களாகத்தானே இருக்கவேண்டும், ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லையே ஏன் ? சிவனும் பார்வதியும் தெய்வங்கள்தாம் ! அவர்களின் குழந்தைகள் அவர்களும் தெய்வங்கள்தாம்!! ஆனால் மஹாவிஷ்ணுவும் பூமாதேவியும் தெய்வங்கள்தாமே,பின் ஏன் அவர்களுக்கு நரகாசுரன் பிறந்தான் ? காரணம் மஹாவிஷ்ணு, ஹிரன்யாஷகன் என்ற அசுரனை வதம் செய்தபின்,…

    Read more

  • You Are That!- “The true giver”

    ஒளவையார் அருளிச் செய்த நல்வழி “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி” ஒளவையார் சாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ அல்லது பாலின(ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ குறிப்பிடவில்லை! மாறாகஇடாதார் (அவர்கள் எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்) அவர்கள் இழிகுலத்தோர்களே என்று எடுத்துரைக்கிறார். ஒளவையார் கூறும் இட்டார் என்பதற்கு வெறும் பொருளையோ அல்லது அன்னத்தையோ ஒருவருக்கு இடுவது என்பதாக கருத்தில் கொள்ளல் ஆகாது.…

    Read more

  • “புத்திமான் பலவான் ஆவான்”

    புத்திமான் பலவான் ஆவான் “கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு“.  குறள் 631 ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் அமைச்சு என்னும் பதத்திற்கு ஒரு நாட்டின் அரசரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் என்று பொருள் கொள்ளுவதைவிட இம்மானுட தேகத்தில் வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கும் அவரவர் புத்தியையே அமைச்சு…

    Read more

  • You Are That!- “The eighth attributes”

    வாலி–காமம்,குரோதம்,துவேசம்,லோபம்,மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் வடிவான அஹங்காரதின் மொத்த பிரதிபலிப்பு. வாலியை யாரும் வெல்லமுடியாது, ஏனெனில் வாலியின் முன் யார் வந்து நின்றாலும் அவர்களின் பலத்தின் பாதி இயல்பாகவே வாலியை வந்தடையும். குணங்களுக்கு குணங்களே எதிரிகள். குணங்களால் குணங்களை வெல்லமுடியாது. (குரோதத்தை குரோதத்தால் வெல்லாமுடியாது). மாறாக அக்குணங்கள் மிகையாகுமேயன்றி, அழிவு என்பது ஒருக்காலும் ஏற்படாது. அப்படிப்பட்ட வாலியை வெல்லக்கூடிய சக்தி ஏழு குணங்களுக்கும் அப்பாற்பட்டவரான, ”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.” பொதுப்பொருள்: எண்…

    Read more

  • You Are That!- “Loved by all”

    “சர்வே ஜன: சுகினோ பவந்து“ ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” தாயுமானவர் “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு“. குறள் 72: அன்புடைமை அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்பது பொதுப் பொருள்.. இதில் வள்ளுவர் குறிப்பிடும் அன்பு எனப்படுவது “சர்வே ஜன: சுகினோ பவந்து“ என்னும் பொருள் கொண்ட தெய்வாம்சம் பொருந்திய குணம். அது…

    Read more

  • You Are That!- “The sense controller”

      “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்”. குறள் 260: புலான்மறுத்தல்  இக்குறளுக்கு கூறும் பொது விளக்கம்:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதாகும். அப்படியாயின் ஷரிடிசாய்பாபா போன்ற மகான்கள் அவர்கள் தாம்வாழ்ந்த காலங்களில் புலால் உண்பவராகத்தான் இருந்திருக்கிறார்.ஆனால் இன்று உலகமே அவரை கைகூப்பி தொழுகின்றதே !!! உண்மையில் வள்ளுவர் கூறும் புலான் மறுத்தல் என்பது ?கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ஞானவிக்ஞான யோகம்,சுலோகம்-11ல்“உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.என்று…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்