LATEST POSTS
-
You Are That!- “knower of capability”
“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்”. தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர் என்பது இக்குறளின் பொதுபொருள். வலிமை என்பது தேகத்தினின்றும், ஊக்கம் என்பது அத்தேகத்தில் குடிகொண்டிருக்கும் உயிரினின்றும் வெளிப்படுவது. “உடைத்தம்” –உடை என்னும் சொல் ஆடையை குறிக்கும். உடைத்தம் –தம்முடைய ஆடையாக இருக்கும் உடம்பு. அதாவது தம் உயிருக்கு ஆடையாக இருக்கும் உடம்பு. ஊக்கம் என்பது உயிரினில் உருவாகும் ஒரு…
-
You Are That!- “glorifier”
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்”. ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள். வள்ளுவர் இங்கு தினைத்துணை உதவி என்றில்லாமல் தினைத்துணை நன்றி என்றே குறிப்பிடுகிறார். மேலும் இங்கு உவமானப் பொருளாக பனையினை சுட்டிக்காண்பிப்பதின் மூலம் இன் நன்றி செய்யக் காரணமான உதவியானது பனையளவு பெரிது என்பதும் பொருளாகின்றது. பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே…
-
ஏகம் ஸத்
ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.” கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை அடுப்பை மூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை… நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள் பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறை வெளிச்சம்.”இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர் வேண்டாம்…..”.வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.ஆனால்,அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்ய முடியாதே?பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொரு சமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.”இரும்பு அடுப்பு இருக்கோன்னோ…..அதைப் பற்ற வை. சுவாமி…
-
You Are That!- “The unborn soul”
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்”. பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். மனிதனாக ஒருவர் பிறப்பெடுத்த பின் மீண்டும் பிறவாமை விரும்பின்,இறவாமை என்னும் நிலையை அடையப் பெற்றால்தான் பிறவாமை கிட்டும். அவ்வாறாயின் “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” என்பதிற்கு மாறாக “வேண்டுங்கால் வேண்டும் மரணமில்லாப் பெருவாழ்வு” என்றுதானே குறட்பா இருக்க வேண்டும் ? கீதைப் அத்தியாயம் –2…
-
“நல்ல விதை நல்ல பலனைத் தரும்”
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்”. ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருள். நற்குணங்கள் என்பது அன்பு,கருணை,பொறுமை,சகிப்புதன்மை இரக்கம் போன்றவைகள். தீயகுணங்கள் என்பது காழ்ப்புணர்ச்சி,சினம்,நன்றி மறத்தல், மோகம் முதலியவைகள். மேற்கூறிய குணங்கள் தனித்து நில்லா ! இவைகள் எந்த ஒரு மனிதனால் விரும்பப்படுகின்றதோ அவனால் அக்குணங்கள்…
-
You Are That!- “twice born”
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”. ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது என்பது இக்குறளின் பொதுப் பொருளாக உள்ளது. dvijatva என்பது சமஸ்கிருத சொல்.அதன் பொருள் being twice-born அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின் மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு என்னும் இருவகை பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது. பைபிள் வாசகம்:In The Bible Jesus…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

