LATEST POSTS
-
You Are That!- “The virtuous disciple”
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” குறள் 134: ஒழுக்கமுடைமை பொதுப்பொருள்: “பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும். மெய்ப்பொருள்: திருக்குறள் ஒரு உலகப்பொது மறைநூல். இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மெய் பொருள் நூல். அவ்வாராயீன் “பார்ப்பான்” என்னும் ஒரு குலத்திற்கு மட்டும் சொன்னதாக இக்குறளை எடுத்துக்கொள்ளலாகாது.…
-
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”
“பஜ கோவிந்தம்பஜ கோவிந்தம்.கோவிந்தன் பஜ மூடமதே“ கோவிந்தன் என்பது உருவத்தை குறிக்கும் சொல். கோவிந்தம் என்பது கோவிந்தனின் உபதேசத்தை குறிப்பது.“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பது பழமொழி. அதாவது வெறுமனே தந்தையின் உருவத்தை மட்டும் வழிபடுவதை விட தந்தையின் சொல்படி நடப்பதே மிகச்சிறந்தது என்றும் அதுவே மந்திரமும் ஆகும் என்னும் பொருள்பட அவ்வைபிராட்டி உபதேசிக்கிறார். மேலும் தந்தை எனப்படுபவரும் வெறுமனே தம்மை வழிபடுவதை விட தம் சொல்படி நடப்பபவர் மீதே அன்பை பொழிவார். இப்பொருள் படுத்தியே… ஸ்ரீ ஆதிசங்கர…
-
You Are That!- “Accepter as God’s gift”
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்“. ஒருவர் தனக்கு கிடைக்கப்பட்டது எதுவாயினும்அது இறைவனால் அருளப்பட்டதே என்னும் மனப்பாங்கோடு வாழ்வாராயின் அவருக்கு எத்தகைய துன்பமான சூழ்நிலைகள்உருவாயினும்….. உதாரணமாக அவர்வறுமை என்னும் கொடிய நோயினால் தாக்கப்பட்டாலும் எதையும்மகிழ்வுடனே ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டுள்ளமையால் அச்சூழலிலும் திருப்தியுடனேவாழ்வர். இத்தகையோரினால் வறுமை வறுமையுற்று துன்பப்படும்.அதாவது வறுமை என்னும் சொல்லே அவர்களது அகராதியில் இல்லாமல் போய்விடும். குறிப்பாக இப்படிப்பட்டவர்கள் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மை அற்றவராய்த்தான் இருப்பர்.ஏனினில் இவர்களது வறுமை நீங்கி செல்வம்வரினும் மனப்பாங்கில் எந்த மாற்றமும் இல்லாமல்…
-
You Are That!- “knower of the hearts “
“ஒருவர் பொறை இருவர் நட்பு” “முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்”. முகத்தால் விரும்பி– இனிமையுடன் நோக்கி– உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். பரஸ்பரம் அன்பு பரிமாறிக்கொள்ளும் இருவரில்,ஒருவர் தன் அன்புக்கு பாத்திரமானவரின் முகத்தை தம் அகத்துனுள் அமர்த்தி, ஒரு முகப்பட்ட உள்ளத்துடன் இனிமையாக அம்முகத்தை நோக்கி, தம் எண்ணங்களால் வெளிப்படுத்தும் இன் சொல்லானது… அத்தகைய அன்பிற்க்குரியவர் எத்துனை வெகு தூரத்தில், கடல் கடந்து இருந்தாலும்…
-
You Are That!- “having no expectations”
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு”. இக் குறளில் மேலோட்டமாக பார்த்தால் வானம் பொழியும் மாரிக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்னும் பொருளாக தோன்றும். அவ்வாறெனின், “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்று அவ்வையாரின் மூதுரை இவ்வாறு கூறுவானேன் ? இதிலிருந்து இப்பூவுலகில் மானுடப்பிறப்பு எடுத்த அனைவருடைய கடமையும் (கடப்பாடு…
-
You Are That!- “knower of uncertainty”
“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்” அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள். “ஆவ தறிவார்” என்னும் பதத்திற்கு எந்த ஒரு செயல்பாடு ஆகியே தீருமோ, எக்காலத்தும் எவராலும் மாற்ற இயலாத ஒன்றாய் உள்ளது அதுவேயாகும்! அத்தகைய செயல் என்பது மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சென்றடைய வேண்டிய இறப்பு என்னும் நியதியே ஆகும். அறிவுடையார் இவ் நியதி ஆகியே தீரும் என்பதை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

