LATEST POSTS
-
You Are That!- “light body”
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற” அறத்துப்பால்:வாய்மை. யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை என்பது பொதுப்பொருள். “மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைத்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைத்தது பார்முதல் பூதம்“ என்பது திருமந்திரசொல். இதன் விளக்கம்: எவ்வாறு மரத்தினால் செய்யப்பட்ட பதுமையானது ஒளிகுறைவின் (அரையிருளில்) காரணம், மாமதயானையாகதோன்றுகிறதோ, அவ்வாறே பரம்பொருள் சொரூபமாக “மானூடர் யாக்கைவடிவு சதாசிவம்” என…
-
You Are That!- “maker of falsehood to real”
“நிற்க கற்றல் சொல் திறம்பாமை”- கொன்றை வேந்தன்:50“ “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்“. குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இங்கு “நன்மை பயக்கும் எனின்“ என்று வள்ளுவர் குறிப்பிடுவதை, யார் பொய்யுரத்தாலும் அது நன்மையையே விளைவிக்கும் என்பதாக பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக எவரொருவர் தம் வாழ்நாள்முழுவதும் வாய்மையை எத்துனை இடர்பாடுகள் நேரிடினும், அதனின்நின்று ஒரு சிறிதும் பிறழாமல், வாய்மையை தன் உயிர் மூச்சாகவே கடைபிடித்து…
-
You Are That!- “thankfulness glorifier”
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும் என்பது இக்குறளின் பொதுப் பொருள். ஆனால் வள்ளுவர் இக்குறளில் உதவி என்று குறிப்பிடாமல் “காலத்தி னாற்செய்த நன்றி” என்றே குறிப்பிடுகிறார் அது எவ்வாறு ? வள்ளுவர் குறிப்பிடும் காலம் என்னும் தக்கதருணம் அவ்வுதவியை பெற்றவற்கே பொருந்தும். மேலும் அத்தகைய தருணமும் வாழ்வில் ஒரேயொரு முறை மட்டுமே நிகழக்கூடியதாக இருக்கும்.அத்தகைய…
-
You Are That!- “An impartial arbitrator”
“தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.” குறள்-111 அருட்ப்ரகாச வள்ளலாரின் பாடல் (பாடல் எண் :4128) கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே. காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. இதில் வள்ளுவர் கூறும் “தகுதி எனவொன்று” உள்ளது என்பதும் வள்ளலார்கூறும் “எல்லார்க்கும் பொதுவில் நடம்…
-
You Are That!- “Creator of the desired child”
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்“. “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்“. உலகியலில் ஒரு தந்தை எனப்படுபவர் தனக்கு பிறந்த மகனை நன்கு வளர்த்து ஆளாக்கி, உன்னத நிலைக்கு உயர்வுபெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தந்தையின் கடமையாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே அன்றி இதில் வள்ளுவர் கூறும் “தந்தை மகற்காற்று நன்றி” எனும் நன்றி நவிலுதல் என்பது எவ்வாறு? அதே போல் மகன் எனப்படுபவருக்கும், தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தையை நல்விதமாக பேணி காப்பது என்பது …
-
You Are That!- “A zealous character”
“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு“. உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும். ஆனால் தற்காலத்தில் அறிவுடையோரே அவ்வறிவின் செயல்பாட்டின் மூலம் உலகின் மிகப் பெரும் செல்வந்தராயும் ஆகியுள்ளனரே ? “உடம்பு உயிரெடுத்ததோ உயிரும் உடம்பெடுத்ததோ உடம்பு உயிரெடுத்தபோது உருவம்மது செப்புவீர் உடம்புயிர் இறந்தபோது உயிர் இற்ப்பதில்லையே உடம்பு மெய்மறந்து கண்டுணர்ந்து ஞானம் ஒதுமே“. என்பது சிவவாக்கியர் பாடல். இங்கு வள்ளுவர்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

