LATEST POSTS
-
You Are That! -“Stable person”
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”. குறள்:155: அதிகாரம்: பொறையுடைமை பொதுப்பொருள்: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர். மெய்ப்பொருள்: ‘வினாச காலே விபரீத புத்தி’ என்பது பழமொழி. ‘விநாச காலே’ என்பது கெட்ட காலத்தை குறிப்பது. உண்மையில் கெட்ட காலம் என்று ஒன்று இல்லை. மாறாக ஒருவர் புத்தியில் பேதலிப்பு ஏற்படும் தருணம் தீமையுடைய செயல்களும் நல்லவை போன்றே தென்படும்.…
-
You Are That! -“Non-originator”
“எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:15) ஒவ்வொரு மனித உருவும் கோடிக்கணக்கான உயிர்அணுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட இவ் உடம்பில் ஒரு நிமிடத்திற்கு 96 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லக்ஷம் எண்ணிக்கை உடையது) உயிர் அணுக்கள் இறந்தும், அதே அளவு எண்ணிக்கையில் 96 மில்லியன் உயிர் அணுக்கள் புதுப்பிக்கவும் படுகின்றன. இது ஒரு விஞ்ஞான கூற்று. அதாவது எந்த அளவு எண்ணிக்கையில் ‘படைத்தல்’ நிகழ்கின்றதோ, அதே அளவு எண்ணிக்கையில் ‘இறப்பு’ அல்லது…
-
You Are That! -“Encouragers”
“பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும் அண்டுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”. அருட்பெருஞ்ஜோதி அகவல்: (711) ‘திறல்’ என்பதிர்க்கு ஊக்கம் என்றும், ‘அண்டு’ என்பதிர்க்கு பொருந்துதல் என்றும் பொருள் உள்ளது. அதாவது பெண்ணின் புறவடிவின் வழியே ‘ஊக்கமாக’ வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல், ஆணின் அகத்தினுள் மனவலிமையாக பொருந்துகிறது. அதுபோன்று ஆணின் அகத்தினுள் மனோதிடமாக உருவாகும் அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல், பெண்ணின் புறத்தோற்றத்தில் ஊக்கமாகவும் பொருந்துகிறது. இவ்வாறு பெண்ணின் புறதோற்றம் வழியே ஆணின் மனத்திற்கு ஊக்கத்தையும், ஆணின் மனோபலம் வழியே பெண்ணின் புறவடிவுக்கு…
-
You Are That! – ” invisible bulwark”
“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்”. (குறள்:744) பொதுப்பொருள்:காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும். மெய்ப்பொருள்: காமம், குரோதம்,துவேஷம்,லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் இவ் ஏழு குணங்கள்தான் ஒவ்வொரு மனிதர்களுக்குளேயும், கண்களுக்கு புலனாகாமல், மறைந்திருந்து தாக்கக்கூடிய பகைவர்கள். “அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது அவ்வையாரின் வாக்கு. இப்படி பெறப்பட்ட அரிதிலும் அரிதான மானுட தேகத்தை, சுவடே…
-
You Are That! – “Immeasurable effort”
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு”. (குறள்:610) பொதுப்பொருள்: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். மெய்ப்பொருள்: மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த…
-
You Are That! – “knower of the knowledge”
“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு”. (குறள்:452) பொதுப்பொருள்: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு சேர்ந்த இனத்தின் இயல்பினை உடையதாகும். மெய்ப்பொருள்: நீரின் தனிப்பட்ட இயல்பு சுத்தமே ஆகும், எனினும் அது சேர்ந்த நிலத்தின் இயல்பால் அதன் தன்மையே பறிபோய் விடுவது போன்று… அறிவின் தனித்த இயல்பு தெய்வத்தன்மையுடன் கூடியது, பிரகாசிக்கக் கூடியதே, எனினும் அவ்வறிவு சேர்ந்த உடம்பின் (நிலத்தின்) தன்மையால், அவ்வுடம்பு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

