LATEST POSTS


  • “கற்பெனப்படுவது சொல்திறம்பாமை”

      “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை“ (கொன்றை வேந்தன்) என்பது  ஒளவையின் வாக்கு.    இங்கு ஒளவை கற்பெனப்படுவதை  உடல்  மற்றும்  மனம் சார்ந்தவையாகவோ அல்லது பெண் பாலருக்கு  மட்டுமே  உரித்ததாகவோ குறிப்பிடாமல்  சொல்லுக்கு  மட்டுமே உரித்ததாக  குறிப்பிடுகிறார். அதாவது  சொல் என்பது  ஐம்புலன்களின் ஐயுணர்வான எண்ணங்களின்  வெளிப்பாடேயாகும். இ ஃது  வாய்மையுடையதாக, எக்காலத்தும் மாறாததாக, திரும்பி பெறமுடியாத திறன் கொண்டதாக  இருத்தல் வேண்டும். இத்தகைய சொல் திறன் உடையவர்கள் யாராயினும் எவராயினும் அவர்கள் சொல்லின் செல்வர்களே. இத்தகைய சொல்…

    Read more

  • You Are That!- “A follower of intuition”

    “தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”. மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் என்பது இக்குறளின் பொதுவிளக்கம். இங்கு வள்ளுவர் “தன்நெஞ் சறிவது” என்று குறிப்பிடுவது intuitionஎன்று சொல்லப்படும் அவரவர்களின் உள்ளுணர்வே ஆகும். எவரொருவருக்கும் ஒரு செயல் செய்ய எத்தனிக்கும் பொழுது, அச் செயல்பாடானது அவர்களின் வாய்மைக்குபங்கம் விளைவிக்குமெனில், ஒரு கணப்பொழுதுநேரம் அவர்களின் உள்ளுணர்வானது அச் செயல்பாட்டின் உண்மை நிலையினை குறித்து அறிவுறுத்தி எச்சரிக்கும். ஆனால் ஆசை…

    Read more

  • You Are That!- “fear evil deeds”

    “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்“. தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். வள்ளுவர் இங்கு தீயினை ஏன் உவமானப்பொருளாக கையாண்டுள்ளார்.? தீயிற்கு தொலைவில் இருக்கும்போது தீயின் வெப்பம் உடலுக்கு கதகதப்பை கொடுக்கக்கூடியதாய் இனிமையுடைதாய் இருக்கும். ஆனால் அருகில் செல்லச்செல்ல அதே தீயின் வெப்பம் உடலையே சுட்டெரித்து விடும். தீயினைப் போன்றே  தீயசெயல்கள் யாவுமே துவக்கத்தில் நற்பயன்களை அள்ளித்தருவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, மாயவலையில்…

    Read more

  • You Are That!- “A woman who commands rain”

    “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.” பொது விளக்கம் வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!. “தெய்வத்தன்மை“ என்பது மானுடராய் பிறந்த அனைவருள்ளும் குடிகொண்டேயிருக்கும். “இல்லறம் அல்லது நல்லறம் அன்று“ என்பது அவ்வை பிராட்டியின் வாக்கு. ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் இல்லறம் மேற்க்கொள்ளுவதே இத் தெய்வீகம் வெளிப்படத்தான் ! வள்ளுவரும், வாசுகியும் மேற்கொண்ட இல்லறமே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்   வள்ளுவர்பிரான்…

    Read more

  • You Are That!- “Pure Consciousness”

    ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு“.  குறள்-354 மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை என்பது பொதுப்பொருள். எவரொருவரும் தம் உறக்க நிலையிலிருந்து விடுபட்டவுடன் அவர்தம்மால்  முதன்முதலில் உணரப்படுவது, ஐம்புலன்களால் வடிவமைக்கப்பட்ட அவரவர்களின் உருவேயாகும். இவ்வுணர்வை கொடுப்பது அவர்களின் உள்ளே மறைபொருளாய் பொதிந்து இருக்கும் “Pure Consciousness”எனும் மெய்யுணர்வே ! இம் மெய்யுணர்வின் இவ் அகவொளியின் மூலமாக வெளிப்படும் ஐம்புலன்களின் ஐயுணர்வே இவ்வுலகமாகவும் இஃதினை உணரும் உணர்வாகவும்…

    Read more

  • “Agre hAra, அக்ரஹாரம்”

     “அக்ரஹாரம் ஒரு பார்வை” “Agre hAra, அதாவது அக்ரஹாரம்” என்னும் சொல்லில் அடங்கிய  உட்பொருளை பற்றி  இங்கு சற்று சிந்தித்து பார்க்கலாம்.  Agre என்பது ஒரு சமஸ்கிருத சொல். இதற்கு  ஆதியில், அப்பால், மேலும் என்று பொருள்கள் உள்ளன. அது போன்று hAra என்பதும் ஒரு சமஸ்கிருதசொல். இதற்கு மாலை என்று பொருள் உள்ளது. எனவே Agre hAra என்பது நுனியும், முடிவும் இல்லாத ஒரு ஹாரம்  போன்ற மாலை என்று பொருள் கொள்ளலாம்.  பிருஹதாரண்யக உபநிஷத்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்