LATEST POSTS
-
You Are That!- “existence without identification “
“சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி” (73) அறிவால் ஒன்றை அறிய அஃது அறிவுக்கு புறம்பாக இருந்தால்தான் அஃதை அறிவால் அறிய இயலும். இப்பூவுலகில் உள்ள உயிர்களின் அறிவின் வெளிப்பாடுகள் யாவும் தமக்கு புறம்பான மற்றவைகள் முன்னிட்டேயாகும். அதற்கு மாறாக தம்முள் பிரகாசிக்கும் அவ் – அறிவையே அறிய முற்படுமின்… “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே“ என்று நாவுக்கரசர் தம் தேவாரத்தில் பாடியபடி, தன்னிலை மறைய,புறம்பான உலகங்களும் மறைய, இரண்டற்ற தன்மையில்,…
-
You Are That!- “truth teller”
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்”. பொதுப்பொருள்: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். பொதுவாக வாய்மை எனப்படுவது ஒருவர் தம் உள்ளம் அறிந்ததை உள்ளது உள்ளபடியே உரைத்தலேயாகும்.அவ்வாறு இருக்க இங்கு வள்ளுவர் வாய்மை என்பதை மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதலேயாகும் என்று ஏன் குறிப்பிடுகின்றார்? எவரொருவராயினும் அவர் தம்மிடமுள்ள குறை அல்லது தவற்றினை அறியப்பெறாமல் இருக்கும்…
-
You Are That!- “Gracious Self”
“எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும் (169) அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி” Ramana magarishi says: Grace is the Self. That also is not to be acquired: you only need to know that it exists. அயமாத்மா பிரம்மம்:- இந்த ஆன்மா பிரம்மமே. இது அதர்வண வேத மகா வாக்கியம், வேண்டுதல் எங்கிருந்து எழுகின்றதோ, அருளும் அங்கிருந்தே கிடைகின்றது. அவ்வாறாயின் உயிரும் அருட்பெருஞ்ஜோதியருளும் வெவேறு அல்ல,ஒன்றே என்பதும் புலனாகின்றது.வேத மகாவாக்கியமும்…
-
“சேரிடம் அறிந்து சேர்”
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்”. ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். என்பது இக்குறளின் பொதுப்பொருள். தெளிந்தான்கண் ஐயுறவும்:ஒருவர் தம் உள்ளக்கிடங்கை அடுத்தவரிடம் வெளிப்படுத்தும்போது அதை உள்ளது உள்ளபடியே மற்றவர் அறிந்திருத்தால், அவ்வறிவின் தெளிவை அவரது கண்களே வெளிப்படுத்தும். அதனை ஆராய்ந்து அறிந்த பின்னரும், அத்தகையவரின் புரிந்துகொள்ளும் திறனில் ஐயம் கொள்ளுதல் … தேரான்கண் தெளிவும்: அல்லது அதற்க்கு மாறாக தம் உள்ளக்கிடங்கை…
-
You Are That!- “Sith aakasam”
Ramana Maharishi says: “Space is in you. The physical body is in space, but not you.” “புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய் அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி (353) புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் (355) அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்: அந்த பரம்பொருள் எவ்வுருவு கொண்டதோ அவ்வுருவுவாகவே உள்ளது, ஏனெனின் தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்காக! பிரகதாரண்யக உபநிடதம்: புவி என்பது இம் மானுட யாக்கையை குறிக்கும் சொல்லே…
-
You Are That!- “to be afraid of death”
“அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்“. பொதுப்பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். இங்கு வள்ளுவர் பயன்படுத்திய “உயிரச்சம்” என்பது எவரொருவருக்கும் தன்னுடம்பை விட்டு தன்னுயிர் பிரியும் தருணம் இயல்பாகவே ஏற்படும் அச்சமாகும். அது போல எத்தகைய அறமற்ற முறையில் ஒருவர் வாழ்ந்து இருப்பினும் “உயிரச்சம்“ உருவாகும் அத்தருணத்தில் நல்லறத்தின் பொருள்திறன் தெரிந்தவராய் அதனை கடைபிடிப்பதால் கிடைக்கப்பெறும்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

