LATEST POSTS
-
You Are That! – “Knower of soul and body”
“உடம்பு வருவகை அறியீர் உயிர் வருவகை அறியீர் உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்”! #திருவருட்பிரகாச_வள்ளலார் ஆறாம் திருமுறை உறுதி கூறல் 2 ஆண் பெண் சேர்க்கையால் ஓர் (உயிர் உடம்பு) குழந்தை உருவாகிறது. எனினும் தாயோ, தந்தையோ அல்லது அக்குழந்தையோ ‘உடம்பு’ வருவகையும், ‘உயிர்’ வருவகையும் அறிய மாட்டார்கள். எவ்வாறெனின் கரு உருவான பின்புதான் ‘உயிர் வருவகையும்’, அது போல குழந்தையாக வெளிவந்த பின்புதான் ‘உடம்பு வருவகையும்’ அறிவார்கள். அதாவது குழந்தை ஆணா அல்லது பெண்ணா…
-
ஆடாது அசங்காது, வா கண்ணா…
“Be Still, And Know That I Am God” இப்பிரபஞ்சமும் அதிலுள்ள உயிர்களும் தோன்றிய நாள் முதல் இன்றுவரை இடைவிடாது சதா ஆடிக்கொண்டுமாய் அசைந்து கொண்டுமாய் தான் இருக்கிறது. அதாவது உருவங்கள் அசையாவிடினும் மனம் அசைகிறது. மனம் அசையாவிடினும் பிராணன் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அசைவிலும் கண்ணனை காண்பது என்பது இயலாத ஒன்று ! எப்பொழுது ஆட்டமும் அசைவும் நிற்கின்றதோ அக்கணமே ‘கண்ணன் வா’ என்று அழைக்காமலேயே வந்து நின்று ‘தான் யார்’…
-
Who is Shirdi Sai Baba?
Mundakopanishad says : “Brahman is not grasped by the senses as it is subtle and infinite, but is realised by the intellect purified through knowledge and meditation.” மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்: “நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.…
-
“கந்தன் கருணை”
“கந்தன் கருணை” ‘கந்து’ என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி’ என்று பொருள் உள்ளது. உயிர்கள் என்னும் யானைகளை மாயையிலிருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் ‘கந்தன்’ ஆனார். ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள். ஆகையால் ‘கந்தன்’ என்பதற்கு ‘இணைப்பை ஏற்படுத்துதல்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது இருவேறு இணையாத தன்மைகள் கருணையால் ஒன்றன இணைந்தால் அதுவே கந்தன் கருணை…
-
That moves, That does not move;
“நின்றால் வெளி, அசைந்தால் வளி” “ஆதியில் ஜோதி இருந்தது,அதன் அசைவிலிருந்து சப்தம் உண்டாயிற்று” ‘வெளி’ என்பதே ஜோதியாக அசைவில்லாமல் இருக்கிறது. உள்ளும் புறமும் அற்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அதாவது போக்குவரத்து என்பதே இல்லாத நிலையே ‘வெளி’ என்பதாகும். ஆகையால் அவ் ‘வெளி’ என்னும் ஜோதியில் அசைவு என்பது உருவாக வாய்ப்பு இல்லை. அவ்வாறு நின்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அவ்வாறு நின்ற ‘வெளிக்குள்’ (எவ்வாறு அசையாது எங்கும் பரந்து விரிந்த கடல் பரப்பில் அசையும் அலைகள்…
-
You Are That! – “divine dictum”
“சிவலோக பிராப்தி” “அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன் அருளாமே”. திருமந்திரம்: பாடல் எண் : 37 ‘அவம்’ என்பதற்கு ‘ஆணை’ மற்றும் ‘கட்டளை’ (command) என்று பொருள்கள் உள்ளது. கட்டளையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியார் எதையும் அறியாதவர்களே! அதாவது மனிதனின் ‘மூளை’ கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு இருக்கும் வரையில்தான் அவனது ‘இருப்பு’ (வாழ்வு) இவ்வுலகத்தில். எப்பொழுது மூளையில் இருந்து…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

