LATEST POSTS
-
You Are That! -“Swifter than mind”
“மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:81) இடைவிடாத எண்ண அலைகள்,பஞ்ச இந்திரியங்கள் ஆகிய மெய், வாய், கண், காது, மூக்கு, மற்றும் காலம் வெளி முதலியவைகள் மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கருவிகள். எண்ணங்கள் அற்ற, பஞ்ச இந்திரியங்கள் இல்லாத, கால வெளி அற்ற, பேராற்றல் கொண்ட அருள்ஜோதியே மதாதீத வெளியாம். மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இக் கருவிகள் இயங்க ஒளியாக இருக்கும் அருள்ஜோதியை, இம் மனதினை கொண்டே அவ் அருள்வெளியை அறிய முயல்வது…
-
You Are That! -“Energy converter”
“எவையெலாம் எவைஎலாம் ஈண்டின ஈண்டின அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:781) ஈண்டின: என்பதிற்கு கூடுதல் என்று பொருள் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் ஒன்றையொன்று ஈண்டிக்கொண்டே இருப்பதால்தான் படைப்பு என்னும் நிகழ்வு இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. எனினும் திருவருள் கூடி வரவில்லையாயின் ஈண்டுதலினால் எந்தவொரு பயனும் கிட்டாது. அதாவது, -நீரும் நெருப்பும் (கடல்,நதி நீரும், சூரிய வெப்பமும்) கூடுதலால் உருவாகும் நீராவி மேகங்கள், -மேகங்கள், குளிர்ந்த காற்று இவைகளின் கூடுதலால் உருவாகும் மழைகள், -நீர்(மழை), நிலங்களின் கூடுதலால் விளையும் உணவுப்…
-
You Are That! -“Claimant”
“ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் அற்றனெ வகுத்த அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:647) வேற்றுமை: சாதி, மதம்,மொழி, இனம், அந்தஸ்து,தேசம் போன்ற இவைகளின் தன்மையால், ஒவ்வொன்றையும் தனித்தனி பெயர் கொண்ட வடிவங்களாக காட்டி, வேற்றுமை நிறைந்ததாக வெளிப்படுத்துவதும்! ஒற்றுமை: சன்மார்க்கம் என்னும் ஞானநெறி மூலம் சாதி, மதம்,மொழி, இனம், அந்தஸ்து,தேசம் போன்ற இவைகளின் தன்மைகளை அற்றுப் போகச் செய்து, அருள்ஜோதி ஒன்றே தேவனாக, அச் ஜோதியை வழிபடும் அனைவரும் ஒரே குலமாக, ஒற்றுமை நிறைந்ததாக வெளிப்படுத்துவதும்!! உரிமைகள்: வேற்றுமை, ஒற்றுமை…
-
You Are That! -“Undefeatable”
“படி அடி வான்முடி பற்றினும் தோற்றா அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி” அகவல்:129 படி அடி வான்முடி பற்றினும்: திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரமனும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியின் ‘படி அடி வான்முடியை’ அயனும், மாலும் பற்றினாலும்… தோற்றா: அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசம் எல்லையில்லாமல் இடைவிடாது வியாபித்துக் கொண்டே போவதால் தான், அஃது ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’ என மாணிக்கவாசக பெருமானாலும், வள்ளல்…
-
You Are That! -“Formless and Nameless”
“எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:257) ஒவ்வொரு மானிட தேகமும்… “நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்” இப்படி எட்டு விதமாக பிரிவு பட்டிருக்கிறது. இது கீழான பிரகிருதி, இதுவே தனித்தனியாக காணும் உருவ அமைப்புக்களின் மூலம். இதினின்று வேறானதும், ‘உயிர்’ ஆவதுமாகிய மேலான பிரகிருதி, உள்மூச்சு,வெளிமூச்சு “என எட்டினுள் இரண்டாக பிளவுபட்டு” இயங்கிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து தோன்றியவையே. ஜகத் எனப்படுவதும்…
-
You Are That! -“Thoughtless speaker”
“மௌனம்” என்பது சம்ஸ்கிருத பாஷை. மௌ: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை. அதற்கு Cut off – துண்டிக்கப்பட்ட என்று பொருள் உள்ளது. மன: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை. அதற்கு Thoughts – எண்ணங்கள் என்று பொருள் உள்ளது. மௌ+மனம் என்று பிரித்துப் பொருள் பார்த்தால்? Cut off Thoughts – துண்டிக்கப்பட்ட எண்ணங்கள் என்றும் பொருளாகிறது. ஆகவே “மௌனம்” என்பதற்கு வெறும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருத்தல் என்று பொருள் கொள்வதை விட, எண்ணங்களில்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

