LATEST POSTS
-
You Are That! – “The breath of all breath”
“எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து” துன்னியார் துன்னிச் செயின். குறள் 494: பொதுப்பொருள்: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் வெல்லமுடியாத பகைவர் என்பது அவரவர்களின் கட்டுக்கடங்காத மனமே ஆகும். மனத்தைப் பற்றி பகவான் ரமணமஹரிஷியின் கூற்று, “பிராணன்(மூச்சு) அடங்க மனம் அடங்கும்” என்பதே! அதாவது திருவருளால் பிராணன் அடங்கத் தக்க இடத்தை அறிந்து, அஃதினில் பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல…
-
You Are That! – “Mudita”
“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார். வழுக்காயும் கேடீன் பது”. பால்: அறத்துப்பால்:அதிகாரம்: அழுக்காறாமை:குறள் 165: பொதுப்பொருள்: பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. மெய்ப்பொருள்: ஒருவர் உள்ளத்தில் தோன்றும் ‘பொறாமை’ என்னும் குணம் தான் பகை உணர்வாக மாறி, புறத்தே பகைவர்களை உருவாக்கிகின்றதே அன்றி, பகைவர்களாக யாரும் தாமே உருவாகுவதில்லை. அவ்வாறு உருவான அத்தகைய பகைவர்களிடத்தும் கூட ‘இரக்க குணம்’ மேலோங்கினால்,…
-
You Are That! – “Income to the soul”
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு”.பால்: அறத்துப்பால்: அதிகாரம்: புகழ் : குறள்: 231 பொதுப்பொருள்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. மெய்பொருள்: இசைதல்:என்பதிற்கு ‘கிடைத்தல்’ என்று ஒரு பொருள் உண்டு. அதாவது எவரொருவர் தமக்கு கிடைத்ததை திருவருளால் தமக்கு அளிக்கப்பட்டதாக எண்ணுகின்றாரோ, அத்தகைவருக்கு ‘ஈதல்’ என்னும் பண்பும் சேர்ந்தே அமையப் பெற்றிருக்கும். ஆதலின் இத்தகையோர் தாம் பெற்றதை…
-
You Are That! – “The Undivided Lord”
The Savitri Upanishad (Sanskrit: सावित्री उपनिषत्), or Savitryupanishad, is a Sanskrit text and one of the minor Upanishads of Hinduism. It is attached to the Samaveda and one of the Samanya Upanishads. The title of the text alludes to the Hindu Sun god. The Upanishad describes the Savitri-Vidya (knowledge of sunlight), asserting that everything in…
-
You Are That! -“Relation grapher”
“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:703) அண்ணுற: என்பதிற்கு அணுகுதல், பொருந்துதல் அல்லது பற்றுதல் என்று பொருள் உள்ளது. பிறந்த பின்பு இயல்பாக பெண்ணிடம் பெண் தன்மையும், ஆணிடம் ஆண் தன்மையும் தான் குடிகொண்டிருக்கும். ‘இன்னாருக்கு இன்னார்’ என்பது அவரவர்கள் பிறக்கும் போதே அருள் ஜோதியால் முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அதற்க்கான தருணமும் சந்திப்பும் நிகழும்போது, அதுவரை பெண் தன்மை மட்டுமே குடிகொண்டிருந்த பெண்ணினுள் ஆண் தன்மையும், ஆண் தன்மை மட்டுமே குடிகொண்டிருந்த…
-
You Are That! – “Act without the doer”
“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்”. அதிகாரம்: துறவு: குறள் 346: பொதுப்பொருள்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மெய்ப்பொருள்: ‘யான்’ என்பது தன்மை ஒருமை பெயர். அதாவது ‘நான்+எனது’ என்னும் கூட்டுறவே ‘யான்’ என்பதாகும். ‘யான்’ என்னும் தன் முயற்சியால் செயல் நடைபெறுவதாக கருதும் எண்ணமே ‘செருக்கு’ எனக் கொள்ளலாம். ‘பார்வை’ அல்லது ‘பார்க்கும் திறன்’…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

