LATEST POSTS


  • திருவாசகம்/சிவபுராணம்-2

    “நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே“ (நோக்கரிய நோக்கே🙂 நோக்கு என்பதற்கு ‘கண் என்றும் பார்வை‘ என்றும் இரு பொருள் உள்ளது. இவ் ஊனக் கண்களால் உலகம் அனைத்தையும் காட்சிப் பொருளாக காண வைக்கும் ‘பார்வை என்னும் பார்க்கும் சக்தி‘ இம்–மானுட தேகத்துனுள் சிவமயமாகவே குடிகொண்டுள்ளது. எனினும் காட்சியாக பார்ப்பவன் தன்னுள் குடிகொண்டிருக்கும் அச்–சிவத்தை தம்முடைய ஊனக் கண்ணினால் கண்டு அறிவது என்பது இயலாது… “காட்சியும் கானாக்…

    Read more

  • “தமிழே சிவம்”

    “எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி” (141) -தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று உள்ளது. உயிர்மெய் எழுத்து என்பது மெய்யுடன் உயிர் கலந்த எழுத்தே! -தமிழுக்கு எழுத்து வடிவமும், சொல் வடிவமும், பொருள் வடிவமும் கிட்டுவது மெய் எழுத்துடன் உயிரெழுத்து கலந்த பின்பே! -மெய் என்பதற்கு ‘உடல்’ என்று பொருள் உள்ளது. இம் மானுட யாக்கைக்கு தமிழைப் போன்றே ஆண், பெண் என்று சுட்டிக்காட்டும் சொல் வடிவம் கிட்டியது மெய்யுடன் உயிர்…

    Read more

  • You Are That! – “Infinite Merciful”

    ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. அவையாரின் நல்வழி:9 பொதுப் பொருள்: ஆற்றில் வரும் மழைவெள்ளத்தின் வரத்து அற்றுப்போயிற்று. ஆற்று மணல் நடப்பவரின் காலடியைச் சுடுகிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஊற்று வெள்ளம் வந்து உலகுக்கு நீரை ஊட்டும். நல்ல குடியில் பிறந்த மேன்மக்களும் அப்படித்தான். தம் செல்வத்தை இழந்து வறுமையில் வாடினாலும் மனம் ஒப்பி இல்லை என்று சொல்லமாட்டார்கள். மெய்ப்பொருள்:…

    Read more

  • You Are That! – “Fearless soul”

    “அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு”. குறள்:534 பொதுப்பொருள்: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. மெய்ப்பொருள்: ஒவ்வொருவரின் ‘அகம் புறம்’ எல்லாம் ‘சிவமயமாகவே’ இருக்கிறது. அஃதுவே அரணாகியும் நின்று, அவரவர்தம் உள்ளத்தில் ‘பயம்’ என்பதே தோன்றாமலேயே செய்து கொண்டும் இருக்கிறது. மாறாக தன்னிடமுள்ள இச் ‘சிவமயத்தை’ மறந்தோரிடம் இருந்து வெளிப்படும் ‘தனிமயமான’ ‘நான்’ என்னும் சிந்தனை கொண்ட…

    Read more

  • You Are That! – “Formless Existence”

    “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்பது வள்ளல் பெருமானின் விண்ணப்பம், ஒருமை: என்பதற்கு ஒரே தன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்ற தன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒரு பிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு என்று பல பொருள்கள் உள்ளன. வள்ளல் பெருமான் குறிப்பிடும் ஒருமை என்பது மேலே குறிப்பிட்ட பல பொருள்களையும் உள்ளடக்கிய ஒருமை. “அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்” (அகவல்:1570) அருட்பெருஞ்ஜோதி…

    Read more

  • You Are That! – “Continuous breeder”

    நீடுக நீயே, நீளுலகம அனைத்தையும் நின்று ஆடுக, என்ற அருட்பெரும் ஜோதி.! நீடு: என்பதிற்கு ‘பெருக்குதல்’ என்று பொருள் உள்ளது. “உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். நீடுக நீயே: அருட்பெரும் ஜோதியின் அருளால் இவ்வுடம்பையும், இவ்வுயிரையும் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கிட்டி அஃதிணைக் கொண்டு…. நீள்: என்பதிற்கு ‘ஒளி’ என்றும் ஒரு பொருள் உள்ளது. நீளுலகம் அனைத்தையும் நின்று ஆடுக: ஒளியால் சூழப்பட்டுள்ள இவ்வனைத்து உலகத்திலும்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்