LATEST POSTS
-
You Are That! – “Untouchable, but accessible”
“எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார் விட்டார் உலகம் என்று உந்தீபற வீடே வீடாகும் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 24. விளக்கம்: பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, மற்றும் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டின் தன்மை கொண்ட ஒவ்வொரு மானிட தேகமும் சிவபெருமானின் திருமேனியாகவே விளங்கிக் கொண்டிருக்கின்றது. இஃதினில் (இத்தேகத்தில்) இயங்கிக் கொண்டிருக்கும் பிராண, அபான வாயுக்களில் யோகக்ஷேமமாகவும், அதாவது திருவாசியாகவும் சிவபெருமானே…
-
You Are That! – “பஞ்சாட்சரம்”
சிவவாக்கியர் பாடல்: 073 “சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம் உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே” அட்சரம்: என்பதற்கு ‘அழியாத எழுத்து’ என்று பொருளும், கபாடம்: என்பதற்கு ‘காவல்’ என்றும் பொருள்கள் உள்ளது. அதாவது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு மானுடப் பிறப்பிலும் இயங்கிக் கொண்டிருக்கும் ‘வாசி’ என்னும் மூச்சானது, காவல் அற்ற வாசலை கடந்து செல்லும் வாயு…
-
You Are That! – “better half”
“பாகம் பிரியாள்” திருமூலரின் திருமந்திரம்:-201 “ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே”. விளக்கம்: பிருஹதாரணீயகோபநிஷத்து: 4.5. “கணவன் பொருட்டன்று, பிரியத்துக்குரிய வனாக கணவன் ஆவது; உயிரின் பொருட்டே கணவன் பிரியத்துக்குரிய வனாக ஆகிறான். மனைவி பொருட்டன்று, பிரியத்துக்குரிய வளாக மனைவி ஆவது; உயிரின் பொருட்டே மனைவி பிரியத்துக்குரிய வளாக ஆகிறாள். ஆகையால் ஆத்மாவே(உயிரே) பார்க்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும்,…
-
You Are That! – “Obscure to the Well-known”
“மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியர் என்று உந்தீபற தவத்தில் தலைவர் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார்.பாடல் 12. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:340 பொதுப் பொருள் : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? மெய்ப் பொருள்: முற்றம்:- என்பதற்கு ‘வீட்டின் முகப்பு’ என்று பொருள் உள்ளது. அஃதினில்…
-
You Are That! – “Food,eater,unifier”
திருமூலரின் திருமந்திரம் – 193 “துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற் சென்றனவே“ “துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி“ துடுப்பு: என்பதற்கு அகப்பை என்று பொருள் உள்ளது. அகப்பையின் பயன்பாடு பானையில் இருக்கும் அரிசி உலையை நன்கு கிளறி சமைப்பதற்காகத்தான். அதுபோன்றே பானையை ஒத்த இம் மானிட தேக உலையுள், உயிர் வித்தாக விளங்கிக் கொண்டிருக்கும் ஒன்றேயான அரிசியை கிளற, அகப்பையை ஒத்த…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண்: 6 ன் விளக்கம்:
திருமூலரின் திருமந்திரம்: 6 “அவனை ஒழிய அமரரும் இல்லை அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே”. அவனை ஒழிய அமரரும் இல்லை:- அமரத்துவத்தை அடையப் பெற்ற சான்றோர்கள் யாவருமே அருளே வடிவாய் விளங்கும் ‘சிவமேயாம்’. அருள் அற்ற (அவனை ஒழிய) அமரர்கள் என்பது எக்காலத்தும் இல்லை! அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை:- அரும் தவம் என்பதே சதா…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

