LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 24 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிதேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்ஆற்றியது தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. மனித வாழ்க்கையில் அனைவருக்கும் இரண்டுவித பாதைகள் உள்ளன, ஒன்று இறுதியில் மரணத்திற்கு வழிவகுப்பதும், அகலமானதும், எளிதானதும், மற்றொன்று மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வழிவகுக்கும் குறுகலானதும், கடினமானதுமாகும். பொதுவாக எல்லா மனிதர்களும் பிறந்தால் இறந்து தான் ஆக வேண்டும் என்பதை ஒரு நியதியாக முழுமையாக ஏற்றுக் கொண்டதால், திருத்தப்படாத வாசியிலேயே, அதாவது வாசி யோகத்தை பற்றி அறியாமல் அகலமான…
-
மதம் இல்லாத அறிவியல் நொண்டி
“Science without religion is lame, religion without science is blind.” -Albert Einstein“மதம் இல்லாத அறிவியல் நொண்டி, அறிவியல் இல்லாத மதம் குருட்டு.” -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு?அறிவியல் என்பது பிரபஞ்சத்தை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவது, அது சமுத்திரம் போன்றது. ஆன்மீகம் என்பது ஆன்மாவின் ரகசியங்களை வெளிப்படுத்துவது, இது சமுத்திரத்தில் உள்ள ஒரு நீர் துளி போன்றது. ஓர் நீர் துளியை பற்றி ஆராயும் போது சமுத்திரத்தின் தன்மை அதில் வெளிப்படாமல்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 23 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனைஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்அல்லும் பகலும் அருளுகின் றானே. வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்:வன்னி என்றால் நெருப்பு , வாரணம் என்றால் கடல் என்றும் பொருள் உள்ளது. வன்னிக்கும் வாரணத்திற்கும் அதாவது நெருப்பிற்கும் கடல் நீருக்கும் இடையில் வல்லவனாக இருக்கும் இறைவன்…எவ்வாறு உலகின் பெரும் பகுதி கரை இல்லாத கடல் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதனால் நிலத்திற்கு எந்த பாதிப்பும் உருவாகாதபடி இவ்விரண்டுக்கும் இடையில் நின்று காத்துக்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 22 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்:மனம் என்பது தொடர் நினைவலைகளைக் கொண்டது அவ்வாறு நினைப்பவனின் நினைவாக இருந்து கொண்டு அம்மனதை, ‘மாயநன் நாடன்’ நாடன் என்றால் ஆளுபவன் என்று பொருள, மாயநன் நாடன்’ என்றால் கண்களுக்கு புலனாகாமல் நம் மனதை ஆண்டு கொண்டிருப்பவன். அவ்வாறு நினைப்பவனின் நினைவாகவே அவன் இருப்பதால், மனம் நினைப்பதை அவன் அறிவான் எனினும்,…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 21ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்கானக் களிறு கதறப் பிளந்தஎம்கோனைப் புகழுமின் கூடலு மாமே. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை:எவ்வாறு வானில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் மழையாக பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொழிகிறதோ, அவ்வாறே ஒவ்வொருவர் உடம்பிலும் உயிர் வித்தாக இருக்கும் ஈசன், தேகம் சிவாலயம் என்னும் உபநிஷத் வாக்கியத்திற்கு ஏற்ப,உட்கொள்ளும் காற்று, நீர், உணவு இவைகளின் வழியாக இவ்வுடம்பை நாடிவரும் எண்ணற்ற தேவகணங்களுக்கு ஒப்பான உயிர் அணுக்களுக்கும்,…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 19 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்முதுபதி செய்தவன் மூதறி வாளன்விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கிஅதுபதி யாக அமருகின் றானே”. முது என்றால் அறிவு, அவ் அறிவிற்கு அறிவாக விளங்குபவன் மூதறிவாளன். விது என்றால் காற்றைக் குறிப்பது, அதாவது வாசியால் வாசி யோகம் பற்றிய அறிவை மூதறிவாளனால் முறையாக அறிந்து, பின் அதை அகர்மத்தில் கர்மமாக செய்பவனின் மெய்யை: உடம்பை, அதுபதி: மூதறிவாளன் தன் நிரந்தர இருப்பிடமாக ஆக்கிக் கொண்டு அமரும்போது, இதுபதி: அவன் உடம்பில் உள்ள…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

