LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2067 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே. கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்:கள்ளம் என்றால் புறத்தில் செய்யக்கூடிய கள்ளம் என்று பொருள் கொள்ளலாகாது, ஏனெனில் புறத்தில் செய்யக்கூடிய கள்ளம் என்றோ ஒரு நாள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தே தீரும். ஆனால் ஒருவர் மனத்தளவில் செய்யக்கூடிய கள்ளம் என்பது, அதாவது ‘பிறன் மனை நோக்குதல்’ போன்ற கள்ளத்தனமான எண்ணங்களை, எவராலும் எக்காலத்தும் அறிய இயலாது.…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 613 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அவ்வவர் மண்டலமாம் பரிசு ஒன்று உண்டு அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில் அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றவர்க்கே. அவ்வவர் மண்டலமாம் பரிசு ஒன்று உண்டு:ஒவ்வொருவரின் மண்டலம் என்னும் பூமியின் அம்சமாகிய இத்தேகத்துக்குள், சிந்தாமணி என்னும் ஓர் உயர்ந்த பரிசு, அதாவது வேண்டுவனவெல்லாம் அளிக்கு தெய்வமணியை ஒத்த பரிசுப் பொருள் ஒன்று உண்டு. அது அவரவர்களின் நாபிக்கமலத்தில் குடி கொண்டிருக்கும் உயிர் வித்தாகிய சிவமேயாகும். அவ்வவர் மண்டலத்து…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 331 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டடித் தேனே. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து: இரவு பொழுது என்பது சந்திர ஒளியாலும் பகல் பொழுது என்பது சூரிய ஒளியாலும் அறியப்படுகிறது. இரண்டும் ஒரு சேர உதித்தால் அதுவே இராப்பகல் அற்ற நிலையாகும். பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்:மானுட தேகம் சுவாசிக்கும் போது வலது நாசியின் வழியாக செல்லும் காற்று சூரியக்கலை…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 236 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவுடை யோரே”. ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து: ஒரு ஆணின் உடம்பிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான உயிர் அணுக்களில் இருந்து, இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அணுவில், இரண்டாவதாக அதில் ஒடுங்கிய மூச்சும், அதாவது அதாவது வாசியின் நாதமும், விந்துவும் கலந்து ஒடுங்கி, ஓர் மானுட உருவாக தோன்றிய காலத்தில்… நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்: நலமுடன் இருந்து…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 55 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லைவேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே. ஆறங்கமாய் வரும் மாமறை கூறங்கம் ஆக ஓதியைக் குணம்பயில்வார் இல்லை:ஆறங்கம்: சிவலிங்க வடிவாக அமைந்திருக்கும் இம்மானுட யாக்கையில் உள்ள மெய் வாய் கண் காது மூக்கு மற்றும் இவைகளின் அறிவாய் விளங்கும் உணர்வு இவைகளே ஆறங்கம் ஆகும். இவைகளில் பொதிந்திருக்கும் மாமறையான ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை…கூறங்கம்: தேகத்தில் இயங்கும் மூச்சை அதாவது…
-
Old testament-12
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.ஏசாயா 51:16 வெளி என்னும் ஆகாயம் நிலை பெற்றால் தான் அது பூமிக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். அதாவது பூமியின் அம்சமான இம்மானுட தேகத்துக்குள் அடங்கியிருக்கும் ஆகாயம் என்னும் உயிர், இடம் விட்டு இடம் பெயராமல் நிலை பெற்றால்தான், அது இவ்-உடம்புக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். ‘இருக்கிறார்’…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

