LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரையன் 13 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லைகண்அளந்து எங்கும் கடந்துநின் றானே. மண் அளந்தான்- மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு ஈரடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் அடி வைத்தவன் திருமால், மலரவன்- தாமரை மலரில் இருக்கும் பிரம்மன் “படி அடி வான்முடி பற்றினும் தோற்றாஅடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி”என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளல் பெருமான்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 12 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்இலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்உறு வார்களும் வான்உறு வார்களும் அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே”. கண்ணுத லான் என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவன் என்று பொருள்.தம் அண்ணலை, தம் நெற்றிக்கு நேரே உள்ள வெற்றிடத்தில் நிறைந்த ஒளியாக காதலினால் கசிய, கொண்டு வந்து, தன் கண்ணீர் மல்க நின்றால், “நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணில் முற்றும் அழியாது உடம்பு” என்னும் ஔவை குரலுக்கு ஏற்ப, அத் தேகத்தில்…
-
Old testament-8
உபாகமம் 33:27 :அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். புயங்கள் என்பதற்கு தோள்கள் என்று பொருள்.ஸ்ரீ வைஷ்ணவர்கள் வலது புற தோள்பட்டையில் சக்கரத்தையும், இடதுபுற தோள்பட்டையில் சங்கையும் சின்னங்களாக குருவிடம் சென்று முறைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒரு மரபு. அவ்வாறு முத்திரைகள் இருந்தால் அவர்களது இறுதி காலத்தில் எமதூதர்கள் பாச கயிற்றை கொண்டு அவர்களை நெருங்கும்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 11ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லைமுயலும் முயலில் முடிவுமற்று ஆங்கே பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே”. அயலும்- பக்கத்திலும், புடையும்- சுற்றிலும், எம் ஆதியை-என் பிறப்பிற்கு மூலமான ஆதியாய் விளங்கும் என் உயிர் வித்துவை, அதாவது எம் ஆதியான வித்துவுக்கு பக்கத்தில் உள்ள வாசியும் , (மெய் வாய் கண் காது மூக்கு) என்னும் ஐம்புலன்களின் புடையால் சூழப்பட்ட என் தேகமும், ஒன்றாகக் கூடி எம் ஆதியை நோக்கும் போது…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 10 ன் விளக்கம்:
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை தண்கடல் ஆமே. ஓம் என்னும் அக்ஷர சப்தத்தில் தான் ஆகாயம் குறுக்கிலும் நெடுக்கிலும் கோர்க்கப்பட்டுள்ளது. இந்த அக்ஷரத்தின் கட்டளையாலேயே சூரியனும் சந்திரனும் தம்தம் ஸ்தானங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.- என்பதுரிஷி யாக்ஞவல்கியரின் உபதேசம்.அவ்வகையில் எவர் ஒருவர் இந்த அக்ஷர சப்தத்தை தனதாக்கி கொண்டார்களோ அவர்களே “தானே” இன்னும் இத் திருமந்திர சொல்லுக்கு உரியவர்கள். தானே இருநிலம் தாங்கி…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 9 ன் விளக்கம்:
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை என்னைப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வார்இல்லை தானே. பொன்னால் செய்தது போல ஒளி வீசி திகழும் தங்க நிற தாழ்ச்சடை பின்கழுத்தின் கீழாக என் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் இறைவன் நந்தி எம்பெருமான், அவனே நான் பணிந்து தொழும் எம் இறைவன் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாதவன் ஆதலின், மற்றவன் தன்னால் அவன் தொழப்படு வார்இல்லை தானே.திருச்சிற்றம்பலம்🙏
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

