LATEST POSTS
-
The one who truly loves you, will set you free
The one who truly loves you, will set you free.~Rumi My guru truly loved me and set me free from the illusion of birth. My wife loved me much, and once she disappeared from the worldly scene, she liberated me from the bonds that had induced an illusory birth by making me solitary. Accordingly, on…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 981 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே”. சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓத:அவ்வே: இதில் அவ்- என்பது ஒரு சுட்டு சொல். வே: என்பது ஓர் உயிர்மெய் எழுத்து. அதாவது அவ்- என்னும் சுட்டுச் சொல், உயிரும் மெய்யும் கலந்த எழுத்தாக விளங்கிக் கொண்டிருக்கும் இம்மானுட உடம்பையும் சுட்டும் சொல்லாக இங்கு திருமூலர் பயன்படுத்தி உள்ளார். காரைக்கால் அம்மையாரும் ”’எவ்வுருவும் அவ்வுருவே”…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1425 ன் விளக்கம்:
“கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே”. “நவகண்ட யோகம்” என்னும் யோகப் பயிற்சி ஒன்று உண்டு. இதில் அந்த யோகத்தை பயில்பவர் தம்முடைய உடம்பை ஒன்பது தனித்தனி பாகங்களாக தாங்களே பிரித்துக் கொண்டு யோகம் பயில்வார்கள். பின்பு தாங்களே மூலத்தோடு மீண்டும் ஒன்பது கண்டங்களையும் இணைத்துக் கொண்டு, ஒரே கண்டமாகவும் அதாவது ஒரே உடம்பாகவும் தம்மை ஆக்கிக் கொள்ள இயலும். இத்தகைய நவகண்ட யோகம் பற்றிய…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 307 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உறுதுணை யாவது உயிரும் உடம்பும்உறுதுணை யாவது உலகுறு கேள்விசெறிதுணை யாவது சிவனடிச் சிந்தைபெறுதுணை கேட்கிற பிறப்பில்லை தானே”. உறுதுணை யாவது உயிரும் உடம்பும்:உறு: என்பதற்கு போர் என்றும் ஒரு பொருள் உள்ளது. மெய் வாய் கண் செவி நாசி இன்னும் இவ்வைந்து புலன்களும் ஐம்பொறிகளில் சிக்கி சிறைபிடிக்கப்படாமல் இருக்க, ஐம்பொறிகளோடு இவ்வைந்து புலன்களைக் கொண்ட உடம்பானது போரிட்டு வெல்வதற்கு உற்ற ஒரே உறுதுணையாக இருக்கும் உயிரும்… உறுதுணை யாவது உலகுறு கேள்வி:அவ்வாறு…
-
விநாயகர் சதுர்த்தி
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏இன்று விநாயகர் சதுர்த்திவிநாயகர் அகவலில் உள்ள“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”என்ற விநாயகர் அகவல் வரிகளின் மெய்ப்பொருளை பற்றி இங்கு ஆராயலாம். “சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சத்தம் ஒவ்வொருவரின் நாவின் வழியே வெளிப்புறமாகவும் உருவாகும். அதுவே முறையான பிராணாயாமம் வழியாக ஒவ்வொருவரின் உட்புறத்தில் இருந்தும் வெளிப்படும். “சிவாய நம” என்னும் இந் பஞ்சாட்சர மந்திர சத்தம் பிராணங்களின் வழியாக ஒருவரின் உள்ளே வெளிப்படும் போது, அது…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1666 ன் விளக்கம்:
“கங்காளன் பூசும் கவத் திருநீற்றை,மங்காமல் பூசி மகிழ்வரேயாம் ஆகில்,தங்கா வினைகளும் சாரும் சிவகதி,சிங்காரம் ஆன திருவடி சேர்வரே” கங்காளன் பூசும் கவத் திருநீற்றை: பொதுவாக திருநீறு என்பது பசுவின் சாணம் போன்ற ‘புறபொருட்கள்’ கொண்டு உருவாக்கும் வெண்ணீறு, எனினும் அதை நெற்றியில் பூசிய ஒரு சில மணித்துளிக்குள் அதன் ஒளி குன்றி மங்கிவிடும். ஆனால் கங்காளன் பூசும் கவச திருநீறு என்பது புறப்பொருள்கள் ஏதுமின்றி ‘அகப் பொருளால்’ மட்டுமே உருவாகும், ‘ மாசில் வெண்பொடி’ என அப்பர் பெருமான்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

