LATEST POSTS
-
You Are That!- “Praying without ceasing”
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை”. காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் இவ்வினையை, திருவினையாக– வினை என்னும் பதத்திற்கு வெறும் செயல் என்று பொருள் கொள்ளலாகாது. எந்த ஒரு சம்பவம் நடந்தே தீருமோ,தவிர்க்கவே இயலாதோ அதுவே வினை எனப்படும். இவ்வினையை குறித்தே வள்ளுவர் தம் மற்றொரு குறளில் “முயற்சி திருவினை ஆக்கும்…
-
You Are That!- “Growing crops”
முற்பகல் செய்யின் பிற்பகல் ( தாமே வந்து ) விளையும் இளமையில் கல் என்பது அவ்வையார் வாக்கு. முற்பகல் என்பது ஒருவரின் இளமைக் காலத்தையே குறிக்கும். மேலும் அவ்வையார் குறிப்பிடும் செய் என்னும் பதம் Action அதாவது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசிக்கும் Action in inaction (அகர்மத்தில் கர்மம்) செய்வதையே குறிக்கும். சத்குருவின் அருளால் ஒருவருக்கு இக் கர்மயோகம் முற்பகலில் (இளமையில்) கல்ப்பிக்கப்படுமின் “பருவத்தே பயிர் செய்” என்னும் அவ்வையாரின் மற்றொரு வாக்கிற்கேற்ப முற்பகலிலேயே…
-
You Are That!- “Non differentiator”
“இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்” – குறள் 851 எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர் என்பது இக்குறளின் பொதுப்பொருள் பகலென்னும் பதத்திற்கு தனக்கு அன்னியமாக பார்த்தல் என்று பொருள். இத்தகைய பார்வையை ஒரு பண்பற்ற தன்மை என்றும் அது தொற்று நோயைபோல எல்லா உயிர்களிடத்தும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கிறார்.மேலும் இத்தகைய கொடிய நோய் ஒருவரை தொற்றிடின்…
-
You Are That!- “A knowable divine parent”
ஔவையார் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் நம் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர்கள் என்கின்றது அவ்வையின் ஆத்திச்சுடி. அவ்வாறு அவர்கள் தெய்வங்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகள் அவர்களும் தெய்வங்களாகத்தானே இருக்கவேண்டும், ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லையே ஏன் ? சிவனும் பார்வதியும் தெய்வங்கள்தாம் ! அவர்களின் குழந்தைகள் அவர்களும் தெய்வங்கள்தாம்!! ஆனால் மஹாவிஷ்ணுவும் பூமாதேவியும் தெய்வங்கள்தாமே,பின் ஏன் அவர்களுக்கு நரகாசுரன் பிறந்தான் ? காரணம் மஹாவிஷ்ணு, ஹிரன்யாஷகன் என்ற அசுரனை வதம் செய்தபின்,…
-
You Are That!- “A doer of action in a passive state”
“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்“ (அதிகாரம்:தவம் குறள் எண்:265) விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருள். இக் குறளில் வள்ளுவர் கூறும் “செய்தவம்” என்பது ஒரு இடைவிடாத செயலை குறிக்கும் பதம். “கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போம் மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்”. ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 4: ஸ்லோகம்: 18 ஆத்மா அல்லது…
-
You Are That!- “The true giver”
ஒளவையார் அருளிச் செய்த நல்வழி “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி” ஒளவையார் சாதி என்று குறிப்பிடும் பொழுது மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளும் சாதியையோ அல்லது பாலின(ஆண்,பெண்) அடிப்படையில் உருவாகும் சாதியையோ குறிப்பிடவில்லை! மாறாகஇடாதார் (அவர்கள் எக்குலத்தவர் மற்றும் எவ்வினத்தவர் ஆயீனும்) அவர்கள் இழிகுலத்தோர்களே என்று எடுத்துரைக்கிறார். ஒளவையார் கூறும் இட்டார் என்பதற்கு வெறும் பொருளையோ அல்லது அன்னத்தையோ ஒருவருக்கு இடுவது என்பதாக கருத்தில் கொள்ளல் ஆகாது.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

