LATEST POSTS


  • You Are That!- “good valuer”

    “சான்றோர் இனத்து இரு”- ஆத்திச்சூடி 45 “சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை”. சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். சான்றாண்மை என்னும் குணத்தின் பண்பு யாதெனின் அஃது மனித குலத்தில் யாரிடம் குடிகொண்டிருந்ததாலும், அத்தகையவரை விட்டு எச்சூழழிலும் விலகாது இருத்தலேயாகும். அதாவது சான்றாண்மை மேற்கொள்பவர்கள் ஒருபோதும் இவ்வரிய பண்பு குறைவுபட தாங்கள் காரணமாகமாட்டார்கள். இரு என்பதிற்கு இரண்டு என்று…

    Read more

  • You Are That!- “immortality”

    “வீடு பெற நில் “- ஆத்திச்சூடி புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துவது யாதெனின்? இவ்வுடம்பினுள் நிலையான இருப்பிடம் நாடி குடிகொண்டிருக்கும் இவ் உயிரானது, இதற்கு முன்னரும் இதுபோன்றே நிலைபெறும் பொருட்டு அநேக தேகங்களில் வசித்து வந்துள்ளது என்பதும் புலனாகின்றது! ஏனெனில் எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர்…

    Read more

  • You Are That!- “continuous delighter “

    “மனம் தடுமாறேல்” ஆத்திச்சூடி -88 “இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்”. குறள் 369: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும் என்பது இக்குறளுக்கு பொதுப்பொருள். ‘அவா’ என்னும் சொல்லுக்கு ‘பெருவிருப்பம்’ கொள்ளுதல் என்று பொருள். அதாவது ஒரு பொருளின் மீது ஏற்ப்படும் அவா-வானது அஃதினை தன்வயமாக்குதல் என்னும் இலக்கிற்கு உள்ளாக்கி, மனதை இன்பத்தில் திளைக்கச்செய்வதே ஆசையென்னும் அவா-வின் இயல்பாய் இருக்க! மாறாக இங்கு வள்ளுவர் பிரான் ‘அவாவென்னும் துன்பத்துள்’…

    Read more

  • You Are That!- “experiencer”

    “Total surrender” “பரிபூரண சரணாகதி“ எதில் உள்ளது பரிபூரண சரணாகதி ? கடந்தகால சிந்தனைகள் அதன் வடிவான தோற்றங்கள் அதுபோல எதிர்கால சிந்தனைகள் அதன் வடிவான தோற்றங்கள் இவ்விரண்டும் கடந்த நிலை எதுவோ அதிலுள்ளது இப்பரிபூரணசரணாகதி.ஏனெனில் கடந்தகால மற்றும் எதிர்கால சிந்தனைகள் மேலோங்கிய நிலையில் அதனுடன் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, சந்தேகம் மற்றும் பயம் எனும் இவைகளும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இந்நிலையில் சரணாகதி என்னும் எண்ணமே எழவே எழாது. 1.“Complete surrender does require that…

    Read more

  • You Are That!- “Unknown, but knowing”

    “ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த ஆதியீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:127) ஓதி: என்பதற்கு அறிவு என்று ஒரு பொருள் உண்டு. கேனோபநிஷத்து 1:3ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “அது- ஜோதி அறிந்த பொருட்களைவிட வேறு, அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டது”. ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த: அறிந்த பொருட்களைவிட வேறாகவும், அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டதாயும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜோதியுடன் இரண்டற கலந்திடும் கிடைத்தற்கரிய உறவை எனக்கு அளித்த… ஆதி ஈறு: ஈறு என்பதற்கு எல்லை என்று…

    Read more

  • You Are That!- “limitless”

    “It is inside all this, it is also outside all this” – isavasyopanishad “அது அனைத்துனுள்ளும் இருக்கிறது, அனைத்திற்கு அப்பாலுமாயும் இருக்கிறது”. – ஈஸாவாஷ்ய உபநிஷத் “ஆத்மா பூதங்களினால் பிளவு பட்டதுபோல் தோன்றிடினும் அது பிளவுபடாதது என்பது கீதை வாக்கு”. வாஸ்துவத்தில் ஆத்மா உள்ளும் புறமும் அற்றது. ஐம்பூதங்கள், ஐம்புலன்கள்,மனம், புத்தி இவைகளினால் உருவான தோற்றத்திற்குள்ளும் ‘அது’ பூரணமாக இருக்கிறது. இவைகளின் உருவாக்கத்திற்கு முன்பேயும், தோற்றத்திற்கு அப்பாலும் ‘அதுவே’ பூரணமாகவே இருந்து கொண்டுருக்கிறது.…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்