LATEST POSTS
-
You Are That! -“Beyond Imagination”
“The true sign of intelligence is not knowledge but imagination.” – Albert Einstein “புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல, கற்பனை. “கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர் அற்புதச் சிற்சபை அருட்பெரும்ஜோதி” (அகவல்:105) இப்பிரபஞ்சம் முழுவதுமே ‘பெயர் மற்றும் உருவம்‘ என்னும் இவ்விரண்டிற்குள்ளேயே அடங்கப் பெற்றுள்ளது. அதாவது அசையும் பொருள், அசையாப் பொருள், கண்களுக்குப் புலப்படுவது, கண்களுக்குப் புலனாகாதது என்னும் இவைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு காரணப் பெயரையும், காரண சரீரத்தையும் பற்றியே…
-
You Are That! -“Absolute”
“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:21) “ஒன்றென” ‘அறிவுக்கு’ அறியும் திறன் ஏற்ப்பட்ட பின்புதான் ‘அறிவு’ என்னும் பெயர் கொண்டாதாகி ஒன்றாய் பிரகாசிக்கிறது. “இரண்டென” இவ்-அறிவு ஒரு பொருளின் தன்மை கொண்டதாய் சேர்த்து அறியப்படும் போது இரண்டாய் பிரகாசிக்கிறது. “ஒன்றிரண்டென” இவ்-அறிவு, அறியப்படும் பொருளுடன் கூடி அறிபவனாக ஒளிரும் போது, ஒன்றிரண்டென (1+2=3) மூன்றாய் பிரகாசிக்கிறது. இவ்வாறு ‘அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன்’ என்று தனித்தனி வடிவாய், பொதுவினுள் நடிக்கும் இப்-பூரணப் பொருள்……
-
You Are That! -“deserving for grace”
“பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:151) எவ்வாறு ஒரே வஸ்து பெரியதாயும், அதுவே சிறியதாயும் மற்றும் அரியதாயும் இருக்க இயலும்? உவமானப் பொருளாக ‘கடலை’ எடுத்துக் கொள்ளலாம். கடலில் உள்ள ஒரே மூலப் பொருள் நீர். இன்-நீரினை கடலாக காணும் போது பரந்து விரிந்து பெரியதாகவும், ஓர் அலையாக காணும் போது மிகச் சுருங்கிய அளவில் சிறியதாகவும், மற்றும் மேற்பரப்பில் தெரியும் இவ்விரண்டையும் விடுத்து நீரின் உள் ஆழத்துக்கு செல்லும்போது அரிதிலும் அரிதான…
-
You Are That! – “inseparable oneness”
“திருவொற்றியூர் பாகம்பிரியாள்” எவ்வாறு நெருப்பு அதன் உஷ்ணம், பால் அதன் வெண்மை என்னும் இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்க இயலாதோ, அது போன்றே ஒரு பொருள் அதன் தன்மை இவற்றை தனித்தனியே பிரிக்க இயலவே இயலாது. “பாகம்பிரியாள்” என்பது அம்பிகையின் ஒரு நாமம். அச்சொல்லிலேயே சிவனும் உண்டு, சக்தியும் உண்டு. அதாவது அங்கு கூடிப்பிரிவதோ அல்லது பிரிந்து கூடுவதோ இல்லை. இத்தகைய ‘மெய்ஞானம்’ எல்லா தம்பதியருக்கும் வாய்க்கப்பெற்றால்? எல்லோரும் எக்காலத்தும் “பாகம்பிரியாள்” என்னும் சொல்லுக்குரியவர்களே. சாய்ராம்.
-
You Are That! -“Ever together”
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”.(குறள்:394) பொதுப்பொருள்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். மெய்ப்பொருள்: “கூடிப் பிரியேல்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. கிடைத்ததை பகிர்ந்துகொண்டு கூடி வாழ்வதே மனித இயல்பு. பொதுவாக இஃது ஏனையொருக்கு அவர்கள் தம் உள்ளத்தில் மகிழ்வை அளித்தாலும், ஞானியர்கள் (புலவர் என்பதிர்க்கு ஞானிகள் என்றும் ஒரு பொருள் உள்ளது) தம் உள்ளத்தில் அம்-மகிழ்வை ஏற்றுக்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

