LATEST POSTS
-
You Are That! – “Overcoming anger”
திருமூலரின் திருமந்திரம்: 2264 “வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளியாமே” வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை: “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க” என்பது வள்ளுவர் பெருமானின் குறள் கூற்று. ‘சினம்’ என்னும் ‘வெகுளி’ பிறந்த ஒவ்வொருவர் தேகத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் குணம். இயல்பை முழுவதுமாக அழிக்க இயலாது. மாறாக ‘சினம்’ என்னும் இக்குணம் தம்தேகத்தை எப்போதும் பாதிக்காத அளவிற்கு, அதாவது ‘வெகுளியை’ எத்தருணத்திலும் வெல்லும்…
-
“இன்பமே! சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-10 “துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதி! இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? ‘இன்பத்தை’ பற்றி உபநிஷத் வாக்கு. எது அளவு கடந்தது அதுவே இன்பம்; அல்பத்தில் இன்பமில்லை. அளவு கடந்ததை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு மணிவாசகப் பெருமான் சிவபெருமானை ‘இன்பமே’ என்னும் சொல்லால் துதித்துப் பாடியுள்ளார். இப்பிரபஞ்சம் என்பது எல்லையற்றது விரிந்து கொண்டே போவது. பிரபஞ்ச வடிவே சிவலிங்க வடிவம்.…
-
“யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-9 “யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? ‘யான்’ என்னும் சொல் ‘நான்’ என்பதிலிருந்து மாறுபட்டது. ‘நான்’ என்பது: ‘சொல்பவன்’ தன்னை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொள்வதற்காக பயன்படுத்தும் சொல். ஆனால் ‘யான்’ என்பது, ‘சொல்பவன்’ தம்மோடு இரண்டறக் கலந்த தம் இறைவனையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்தும் சொல். மணிவாசகப் பெருமான் தம்முடன் இரண்டறக் கலந்துவிட்ட சிவபெருமானையும் இணைத்துச் சுட்டிக் காட்டுவதற்காக, ‘யான்’ என்னும் பதத்தை இங்கு கையாண்டுள்ளார்.…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே”. அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கே பரம்பொருளை அடைதலும் கைகூடும். நுண்ணியதாக உள்ள பரமாணு, உயிர் வித்தாக, அதாவது சிவமாகவே ஒவ்வொரு தேகத்துக்குள் இருந்து கொண்டும், அதுவே தன்னை…
-
“எத்தனே! சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-8 ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள எட்டாவது பாடலில் உள்ள வரிகள். எத்தன்: என்பதற்கு ஏமாற்றுவோன் என பொருள் உள்ளது. அதாவது பார்வை, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன் மற்றும் நினைவு, நினைக்கப்படும் பொருள், நினைப்பவன் என்ற மூன்று விதமான தன்மைகளில், ஒருவர் சிவபெருமானை பார்ப்பவனிலும், பார்க்கப்படும் பொருளிலும் அதுபோன்றே நினைப்பவனிலும்,…
-
“ஈசனே! சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-7 “சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? ஈசன்: என்பதற்கு எப்பொருட்கும் இறைவன்; தகப்பன்; குரு; அரசன்; தலைவன்; மூத்தோன் என்று பொருள்கள் உள்ளது. சிவபெருமானை, எப்பொருட்கும் இறைவனாக பார்க்கும்போது, மணிவாசகப் பெருமான் தம்மெய்யையும் அப் பொருட்களில் ஒன்றாகவும்… சிவபெருமானை, தகப்பனாக நேசிக்கும்போது தாம் மகனாகவும்…. சிவபெருமானை, குருவாகவே கண்டபோது தாம் சீடராகவும்…. சிவபெருமானை, அரசனாக எண்ணும்போது தாம் குடிமகனாகவும்…. சிவபெருமானை, தலைவனாக நோக்கும்போது தாம் தொண்டனாகவும்…. சிவபெருமானை,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

