LATEST POSTS
-
You are that! – “Bhrahma Sakthi”
உயிரற்ற உடல் ‘நான்’ என்று சொல்லாது- அவ்வுடலை உயிர்விக்கும் சக்தி ‘நான்’ என்று எழுவதில்லை; இவ்விரண்டுக்கும் இடையில், ‘இவ்வுடலே நான்’ என்னும் ஒன்று தோன்றுகிறது. இதுவே முடிச்சு, பந்தம், ஆன்மா, நுட்பமான உடல், அகங்காரம், இந்த அலைதல் மற்றும் மனம் என்பதை அறிந்து கொண்டு, விழிப்பு,கனவு,உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் அறியப்படும் ‘இவ்வுடலே நான்’ என்னும் உணர்வுக்கு ஆதாரமான அவ்வுடலின் வடிவாகவே ஒளிக்கும் அஷ்ரசக்தியை உணர்ந்தபடியே இருங்கள்.ரமணமகரிஷியின் உள்ளது நாற்பது:24
-
Try something different. surrender.
ஸ்ரீ ரமண மகரிஷி, நான் யார், பி. 13? கடவுளும் குருவும் வேறு வேறு அல்ல. புலியின் தாடையில் விழுந்த இரை தப்பாது என்பது போல, குருவின் கருணைப் பார்வையின் எல்லைக்குள் வந்தவர்கள் குருவால் காப்பாற்றப்படுவார்கள், தொலைந்து போக மாட்டார்கள். ஆனாலும், ஒவ்வொருவரும் தன் சொந்த முயற்சியால், கடவுள் அல்லது குரு காட்டிய பாதையில் சென்று விடுதலை பெற வேண்டும். கடவுளும் குருவும் முற்றிலுமாக சரணடைபவர்களுக்கு மட்டுமே விடுதலைக்கான வழியைக் காட்டுவார்கள்; அவர்கள் தாங்களாகவே ஆன்மாவை விடுதலை…
-
You are that! -“The veil remover”
‘ஆங்காரம்’ என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஒரு முக்காடு . – ரூமியின் முத்துக்கள் ‘ஆங்காரம்’ உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம், என்பது பத்திரகிரியாரின் புலம்பல். ‘ஆங்காரம்’ என்பது மெய்,வாய்,கண், காது, மூக்கு என்னும் ஐம்புலன்களும் பொறிகளாக மாறி சுட்டெரிக்கும் தன்மையே ஆகும். இது ஒருவரின் விழிப்புநிலையில் மட்டுமே செயலாக்கத்தில் இருக்கும். தூக்கநிலையில் ஐம்புலன்களும் பொறிகளாக மாறாததால், சுட்டறிக்கப்படாமல், அதன் காரணாம் ‘ஆங்காரம்’ உள்ளடங்கியே இருக்கும். ஆகையால் ஒருவர் தமது…
-
YOUR MISTAKES CAN ALSO LEAD YOU TO THE TRUTH
உங்கள் தவறுகள் உங்களை உண்மைக்கு இட்டுச் செல்லும்.- ரூமி இது எவ்வாறு சாத்தியமாகும்?ஒருவர் தாம் தவற்றில் இருக்கிறோம் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த தவற்றை திருத்திக்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்தால்… அந்த தவறே அத்தகையவரின் உள்ளொளி மூலமாக உண்மைக்கு இட்டுச் செல்லும். மாறாக தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாதவர்களின் உள்ளத்தில் உள்ளொளி தோன்றாததால், உண்மை எதிரில் நின்றாலும் அவர்களால் உணரஇயலாது. YOUR MISTAKES CAN ALSO LEAD YOU TO THE TRUTH.-Rumi How is…
-
“மூன்றாவது கண்“
மற்ற கண்ணால் பார்க்க இரண்டு கண்களையும்மூடு – ரூமி “காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்: 153-154 அருட்பெருஞ்ஜோதி ஒரே நேரத்தில் காட்சியாகவும் மற்றும் காணப்படாததாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது எவரொருவர் விழிப்பு நிலையில் காணப்படும் காட்சியாகவும் மற்றும் உறக்க நிலையில் காணப்படாததாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தம் உருவை ஒரே நேரத்தில் தம் இருகண்களால் உணரும்போது, அத்தகையவரின் மூன்றாவது கண், அவருள்ளேயே ஆட்சியாக விளங்கிக்கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் காட்சியை காண்பிக்கும். ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿
-
Similarities between the Vedas and Sufism.
‘I am’ My Name, which is a contraction for Om, the Divine Supreme. — krishna yajur veda ‘நான்’ என் பெயர், இது தெய்வீக உச்சமான ஓம் என்பதன் சுருக்கமாகும். —கிருஷ்ண யஜுர் வேதம் Similarity in Sufism, I prayed for a miracle and realized ‘I am’ the miracle. I prayed for a soul mate and realized ‘I am’ the One. …
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

