LATEST POSTS
-
“மெய்பொருள் காண்பதே அறிவு”
அப்பர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை “பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்; “எந்தையே! ஏகமூர்த்தி!” என்று நின்று ஏத்தமாட்டேன்;” பொந்தை: என்பது உடலை குறிக்கும் சொல். இதுபோன்று இவ்வுடலை குறிப்பதற்கு தமிழில் ‘மெய்’ என்றும் ஒரு சொல் உள்ளது. ‘மெய்’ என்பதற்கு ‘உடல் மற்றும் உண்மை’ என்று பொருள்கள் உள்ளது. ‘மெய்பொருள் காண்பதே அறிவு’ என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு. அப்பர் பெருமான் தாம் சமணமதத்தை தழுவி இருந்தவரை தமது உடல் மெய்ப்பொருள் காணாத, ஒன்றுமில்லாத பொந்தையாக…
-
You Are That! -” பஞ்சகச்சம், மடிசார்”
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து“ (அடக்கமுடைமை குறள் எண்:126) பொதுப்பொருள் : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. மெய்பொருள்: ஐந்து விதமான தன்மை உடைய ஐம்பொறிகளையும் ஒரே தன்மையுடைய பிராண சக்திக்குள் ஆமைபோல் உள்ளிழுக்க வல்லவனின் ஆற்றலால், அவனுடைய மூவேழு தலைமுறைகளும் காக்கப்படும். இத்தகைய ஆற்றல் உடையவர்கள் அடையாளமாக உடுத்தும் வஸ்திரமே ‘பஞ்சகச்சம்‘ என்பதாகும். ‘கச்சம்‘ என்பதற்கு ‘ஆமை‘ என்றும்…
-
You Are That! -“Cosmic dance”
“ஆனந்தாண்டவ நடராஜப் பெருமான்” நடராஜப் பெருமானின் ஆட்டம் என்பது பஞ்ச அம்பலங்களான பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் என்னும் இவைகளில் மட்டுமில்லை. பஞ்ச பூதங்களின் திரிபான ஒவ்வொரு மானுட யாக்கையிலும் கூட அம்பலத்தான் ‘சிவா-வாசியாக’ ஆடிக் கொண்டுதான் இருக்கிறான். ‘வாசி எனும் மூச்சாக அம்பலத்தான்’ இம்மானுட தேகத்தில் இடைவிடாது ஆடிக்கொண்டே இருப்பதால்தான்… ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், செவி, நாசி போன்றவைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘சிவா- வாசியாக’ இம்மானுட தேகத்தில் ஆடவில்லையெனின், ஐம்புலன்களும்…
-
திருவாசகம் – திருப்பூவல்லி
திருவாசகம் – திருப்பூவல்லி “இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்” இணையார்: இணை என்பதற்கு ஒப்புமை என்று பொருள். ஆகவே இணையார் என்பது ஒப்புமைக்கு அப்பாற்பட்ட , அவனுக்கு இணையாக எனக்கொள்ள எவரும் இல்லாதவர் என்றும் பொருளாகிறது. அப்படிப்பட்ட இணை வைக்கவே இயலாத அவன் திருவடிகள் தம் தலைமீதும் படவேண்டுமென எவரும் விரும்பின்… ‘இணையார்’ என்பதற்கு எதிர்மறை சொல்லாக ‘துணையார்’ என்பதைக் கொள்ளலாம். அதாவது இணை வைக்கவே இயலாத அவனுக்கு இணையாக எப்போது…
-
You Are That! -“அந்தர்யாமி”
திருஞானசம்பந்த பெருமான் பதிகம்: “செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே”. இதுவரை புறவழிபாடு மூலமே (நல்கு:) எனக்கு அருளைப்புரிந்து வந்த (நம்பனே:) சிவனே, இனி என் (சிந்தை யார்தொழ:) புறவடிவம் போன்றே விளங்கிக் கொண்டிருக்கும் அகவடிவமான என் சிந்தை யார்தொழும் படி, (செல்ல வுந்துக:) புறவழிபாட்டிலிருந்து அகவழிபாட்டிற்க்கு (மாறருள்🙂 மாற: செல்ல, (உந்துக:) தள்ளி அருள்செய் (நம்பனே🙂 சிவனே! ஏனெனில் புறத்திலிருந்து திரும்பி அகவழிபாட்டிற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதன்று, (நல்கு:) விருப்பம் ஏற்ப்பட்டாலன்றி…
-
You Are That! -“True Self”
The voice ‘I’ cannot be used to identify the true existence, since it doesn’t have any shape. When this human figure, formed by famine giants, reflects in the true existence force… This I, birth, gender, name, relationship, community, religion, mother tongue, place, status, hunger, thirst, fitness, old age, disease, and death all that occurs… When…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

