“மரணத்தின் மரணம் – நீரே” நாராயணன்:”

   “அண்டம் முழுவதையும் படைத்த நாராயணன், ஒரு சிறிய நீர் குட்டையில் துயின்று கொண்டிருக்கிறார்.” – அதர்வ வேதம்
பிரகதாரண்யக உபநிடதம் (3:2; 10) முன்வைக்கும் ஒரு அற்புதமான உரையாடலை முன்னிறுத்தி, இந்தத் தேடலை நாம் மேற்கொள்வோம்.

உபநிடதமும் அக்னி தத்துவமும்:
ரிஷி யாக்யவல்க்கியரிடம், “அனைத்து மானுட சரீரமும் மரணத்தின் உணவாகின்றன. அந்த மரணம் யாருக்கு உணவாக இருக்கிறது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அதற்கு யாக்யவல்க்கியர் அளித்த பதில் மிக நுட்பமானது:
“அக்னியே மரணம், அதற்கே எல்லா மானுட சரீரங்களும் உணவாகின்றன. ஆனால், அந்த அக்னியே நீரின் உணவாகிறது.”
வேதத்தின்படி, அனைத்து மானுட சரீரங்களும் மரணம் எனும் அக்னிக்கு இரை ஆகிறது. ஆனால், அந்த அக்னியைக் கட்டுப்படுத்தி, தம் சரீரத்தை நேரடியாக நீருக்கு உணவாக்குபவர் மரணத்தை வெல்கிறார்.

நீரே நாராயணன்:
மகாநாராயண உபநிஷத் अपो वै नारायणः  ஆபோ வை நாராயண: உண்மையாகவே “நீரே”  நாராயணன் என்று பிரகடனப்படுத்துகிறது. இங்கே நீர் என்பது வெறும் திரவப் பொருள் அல்ல; படைப்பின் தொடக்கத்திற்கு முன்பே இருந்த ஆதி மூலப் பொருள் (eternal water)

இதனை நாம் இருவேறு விதமாகப் பார்க்கலாம்:
1. சாதாரண வழி: மரணத்திற்குப் பின், அக்னிக்கு உணவான உடல், அந்த அக்னியின் வாயிலாக இறைத்தத்துவமான நீரைச் வேத மந்திரங்கள் வழியாக  சென்றடைகிறது, அதாவது கரை சேர்கிறது என்பது வழி வழியாக இருந்து கொண்டிருக்கும் நம்பிக்கை.
2. ஞான மார்க்கம்: குரு அருளால், மரணத்திற்குப் பின் காத்திருக்காமல், இவ்வாழ்விலேயே தன் தேக உணர்வை (அகந்தையை),
பகவத் கீதை அத்தியாயம் 10 ஸ்லோகம் 34 ல் “அனைத்தையும் விழுங்கும் மரணம் நான்” என்று ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்தபடி, ‘மரணத்தின் மரணமான’ அந்த ஆதிநீருக்கு -eternal water – ஶ்ரீமன் நாராயணனுக்கு  அர்ப்பணிக்கும் திறன் பெறுபவர், வைகுண்ட வாழ்வை இப்போதே உணர்கிறார்.

ஞானிகளின் சாட்சி:
நம் முன்னோர் இந்த ஆதிநீரின்- eternal water மகத்துவத்தை வெவ்வேறு விதமாகப் போற்றியுள்ளனர்:
அருணகிரிநாதர்: “நாத விந்து கலாதீ நமோநம” – படைப்பின் ஊற்றாகிய இந்நீரையே முருகப்பெருமானாகத் துதிக்கிறார்.
திருஞானசம்பந்தர் ”மந்திரமாவது நீறு’ – திருநீறு என்பது வெறும் விபூதியல்ல, அந்த ஆதிநீரின் மந்திர வடிவம் என்றும்,
ஶ்ரீ ரமண பகவான்:  “உதித்த இடத்தில் ஒடுங்குதலே ஞானம்” – ஒரு வடிவம் எந்த மூலத்திலிருந்து உதித்ததோ, அந்த மூலமாகிய ஆதிநீரிலேயே மீண்டும் கரைந்து விடுவதே உண்மையான ஞானம்.

முடிவுரை:
“நீரே”  நாராயணன் என்பது படைப்பின் அடிப்படை தெய்வீகமானது என்பதையே பறைசாற்றுகிறது. எங்கே நாம் உதித்தோமோ, அங்கேயே நம்மை ஒடுக்கி, அகந்தையை அழித்து இறைவனுடன் கரைவதே மரணத்தின் மீதான வெற்றி. மரணத்தை மரணமாக்குவது என்பது, தேகத்திற்கு அப்பால் உள்ள அந்த ஆதி மூலத்தை இப்போதே உணர்தலே ஆகும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ! 🙏

________________________________________________________________________

இந்த பதிவு குறித்து ஜெமினி AI ன் கருத்துப் பகிர்வு

இது வேத சிந்தனை மற்றும் ஞான மார்க்கத்தின் ஆழ்ந்த உணர்வுகளைத் தூண்டும் ஒரு தொகுப்பாகும். மரணத்தை ஒரு முடிவாகக் கருதாமல், ஒரு மீள்வருகையாக—அதாவது, ‘நித்திய நீர்’ எனும் ஆதி, உருவமற்ற நிலையில் அகந்தை கரைந்துபோவதாக—கட்டமைப்பதன் மூலம், அத்வைத மெய்யறிதலின் ஒரு மையக் கோட்பாட்டை நீங்கள் முன்னிலைப்படுத்துகிறீர்கள்: அதாவது, ‘மரணத்தின் மரணம்’ என்பது ஒருவன் தன் மூலத்தை உணர்வதே ஆகும்.

வேத நெருப்பிற்கும் (*அக்னி*) ஆத்மாவின் (*நாராயணனாக*) உருமாற்றும் சக்திக்கும் இடையே நீங்கள் ஏற்படுத்தியுள்ள தொடர்பு, சடங்கு சார்ந்த *கர்ம-காண்டத்தையும்* அகமுக *ஞான-காண்டத்தையும்* அழகாக இணைக்கிறது.

உங்கள் சிந்தனைகளை விரிவுபடுத்திச் சொல்ல வேண்டுமென்றால்:

* **நெருப்பின் உருமாற்றம்:** நீங்கள் மேற்கோள் காட்டிய *பிருஹதாரண்யக*ப் பகுதியில், *அக்னி* உருவங்களை உண்ணும் பெரும் சக்தியாகச் செயல்படுகிறது, ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல, அது *தூய்மைப்படுத்துபவனாகவும்* இருக்கிறது.  “ஆன்மா” என உடலைப் பற்றிக்கொண்டிருக்கும் அகங்காரம் கைவிடப்படும்போது, “நெருப்பு” இனி எரிப்பதில்லை; அது ஒளியூட்டுகிறது. எல்லா பிரக்ஞையும் எங்கிருந்து பாய்கிறதோ, அந்த அடிப்படையான *ஆபோ*வை (நீரை) அது வெளிப்படுத்துகிறது.


**நெருப்பின் எச்சமாக விபூதி:** புனித சாம்பலுக்கும் (*விபூதி*) ஆதி நீருக்கும் இடையிலான உங்கள் தொடர்பு வியக்கத்தக்கது. நெருப்பு என்பது மூலத்திற்குத் திரும்பும் செயல்முறை என்றால், சாம்பல் என்பது எஞ்சியிருக்கும் அமைதியான, நடுநிலையான சாட்சியாகும்—அது அழிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் பௌதீகச் சின்னம், வெளிப்பட்ட, ஆனால் அகங்காரமற்ற வடிவத்தில் “நித்திய நீரின்” சாராம்சம்.


**”இங்கேயும் இப்பொழுதும்” வைகுண்டம்:** ஸ்ரீ ரமண மகரிஷியை மேற்கோள் காட்டுவதன் மூலம், இந்த மெய்யியல் கருத்தை நீங்கள் நேரடி அனுபவத்தில் நிலைநிறுத்துகிறீர்கள். அவர் குறிப்பிடும் “அடங்குதல்” என்பது, விழிப்புணர்வின் கவனத்தை “மனக் குரலிலிருந்து” அது எழும் மௌனத்திற்கு நகர்த்தும் நேரடியான செயலாகும்.  தேடுபவர், தாம் அர்ப்பணிக்கப்படும் உடல் அல்ல, மாறாக அந்த அர்ப்பணமும் (வாழ்வும்) அக்னியும் (காலம்/மரணம்) நிகழும் பிரக்ஞையே என்பதை உணரும்போது, *காலம்* (காலம்/மரணம்) குறித்த அச்சம் மறைந்துவிடுகிறது.

இந்தக் கண்ணோட்டம், மரணத்திற்குப் பிந்தைய ஒரு இலக்கிலிருந்து கவனத்தை மாற்றி, உடனடியான, அக கரைதலை நோக்கிச் செலுத்துகிறது. வைகுண்டம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஓர் இடம் அல்ல, மாறாக அது ‘அகங்காரம்’ அலைகளை நிறுத்தி, நாராயணனின் அமைதியான, எல்லையற்ற ஆழத்தை மட்டுமே விட்டுச்செல்லும் ஓர் இருப்பு நிலை என்பதை இது தேடுபவருக்கு நினைவூட்டுகிறது.

‘சூனியம்’ மற்றும் ‘தூய பிரக்ஞை’ ஆகியவற்றின் இயல்பு குறித்த உங்களின் சமீபத்திய ஆய்வுகள், ‘நித்திய நீர்’ என்ற இந்தக் கருத்தை வெறும் தத்துவார்த்த ஆய்வாக இல்லாமல், ஒரு நேரடியான, வாழ்ந்து அனுபவித்த அனுபவமாக உணரச் செய்துள்ளதா?



Leave a comment