
“அண்டம் முழுவதையும் படைத்த நாராயணன், ஒரு சிறிய நீர் குட்டையில் துயின்று கொண்டிருக்கிறார்.” – அதர்வ வேதம்
பிரகதாரண்யக உபநிடதம் (3:2; 10) முன்வைக்கும் ஒரு அற்புதமான உரையாடலை முன்னிறுத்தி, இந்தத் தேடலை நாம் மேற்கொள்வோம்.
உபநிடதமும் அக்னி தத்துவமும்:
ரிஷி யாக்யவல்க்கியரிடம், “அனைத்து மானுட சரீரமும் மரணத்தின் உணவாகின்றன. அந்த மரணம் யாருக்கு உணவாக இருக்கிறது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அதற்கு யாக்யவல்க்கியர் அளித்த பதில் மிக நுட்பமானது:
“அக்னியே மரணம், அதற்கே எல்லா மானுட சரீரங்களும் உணவாகின்றன. ஆனால், அந்த அக்னியே நீரின் உணவாகிறது.”
வேதத்தின்படி, அனைத்து மானுட சரீரங்களும் மரணம் எனும் அக்னிக்கு இரை ஆகிறது. ஆனால், அந்த அக்னியைக் கட்டுப்படுத்தி, தம் சரீரத்தை நேரடியாக நீருக்கு உணவாக்குபவர் மரணத்தை வெல்கிறார்.
நீரே நாராயணன்:
மகாநாராயண உபநிஷத் अपो वै नारायणः ஆபோ வை நாராயண: உண்மையாகவே “நீரே” நாராயணன் என்று பிரகடனப்படுத்துகிறது. இங்கே நீர் என்பது வெறும் திரவப் பொருள் அல்ல; படைப்பின் தொடக்கத்திற்கு முன்பே இருந்த ஆதி மூலப் பொருள் (eternal water)
இதனை நாம் இருவேறு விதமாகப் பார்க்கலாம்:
1. சாதாரண வழி: மரணத்திற்குப் பின், அக்னிக்கு உணவான உடல், அந்த அக்னியின் வாயிலாக இறைத்தத்துவமான நீரைச் வேத மந்திரங்கள் வழியாக சென்றடைகிறது, அதாவது கரை சேர்கிறது என்பது வழி வழியாக இருந்து கொண்டிருக்கும் நம்பிக்கை.
2. ஞான மார்க்கம்: குரு அருளால், மரணத்திற்குப் பின் காத்திருக்காமல், இவ்வாழ்விலேயே தன் தேக உணர்வை (அகந்தையை),
பகவத் கீதை அத்தியாயம் 10 ஸ்லோகம் 34 ல் “அனைத்தையும் விழுங்கும் மரணம் நான்” என்று ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்தபடி, ‘மரணத்தின் மரணமான’ அந்த ஆதிநீருக்கு -eternal water – ஶ்ரீமன் நாராயணனுக்கு அர்ப்பணிக்கும் திறன் பெறுபவர், வைகுண்ட வாழ்வை இப்போதே உணர்கிறார்.
ஞானிகளின் சாட்சி:
நம் முன்னோர் இந்த ஆதிநீரின்- eternal water மகத்துவத்தை வெவ்வேறு விதமாகப் போற்றியுள்ளனர்:
அருணகிரிநாதர்: “நாத விந்து கலாதீ நமோநம” – படைப்பின் ஊற்றாகிய இந்நீரையே முருகப்பெருமானாகத் துதிக்கிறார்.
திருஞானசம்பந்தர் ”மந்திரமாவது நீறு’ – திருநீறு என்பது வெறும் விபூதியல்ல, அந்த ஆதிநீரின் மந்திர வடிவம் என்றும்,
ஶ்ரீ ரமண பகவான்: “உதித்த இடத்தில் ஒடுங்குதலே ஞானம்” – ஒரு வடிவம் எந்த மூலத்திலிருந்து உதித்ததோ, அந்த மூலமாகிய ஆதிநீரிலேயே மீண்டும் கரைந்து விடுவதே உண்மையான ஞானம்.
முடிவுரை:
“நீரே” நாராயணன் என்பது படைப்பின் அடிப்படை தெய்வீகமானது என்பதையே பறைசாற்றுகிறது. எங்கே நாம் உதித்தோமோ, அங்கேயே நம்மை ஒடுக்கி, அகந்தையை அழித்து இறைவனுடன் கரைவதே மரணத்தின் மீதான வெற்றி. மரணத்தை மரணமாக்குவது என்பது, தேகத்திற்கு அப்பால் உள்ள அந்த ஆதி மூலத்தை இப்போதே உணர்தலே ஆகும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ! 🙏

