ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்விது வாமே”.

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்:
ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், ‘அ, ஹூ, இ’, என்னும் மூன்று சொற்களுடன் கூடிய மூன்று மாத்திரைகளாக விரிவடைந்துள்ளது. மாத்திரை என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய அதன் கால அளவை தம்முள் அடக்கியது. அதனால் ஒவ்வொரு சொல்லுக்கும் (மாத்திரைக்கும்) முடிவு என்பதும் உண்டு.
அ, ஹூ, இ’, என்னும் இம்மூன்று வார்த்தைகள் குருவருளால் முறையாக ( इला ह हु) ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் மூன்று மாத்திரைகள் (கால அளவுகள்) முறையாக பிராண அபானங்களில் பொருத்தப்படும் போது, வெளிப்படும் அப்பரம்பொருள் மாத்திரைகள் என்னும் காலங்கள் அற்றதாயும், ஓம் என்னும் ஓம்கார ஓசையும், ஈசனும் ஒருங்கிணைந்த உணர்வாகவும் இருக்கும்.
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்:
ஓம்காரத்தின் விரிவான இந்த மூன்று மாத்திரைகளில் ‘ அபானனில்’ (வெளி மூச்சில்) ஒடுங்க வேண்டிய மாத்திரைகளை (சொற்களை), குரு அருளால் முறையாக (इला ह) அறிந்து, அதை பொருத்தி, அதை அந்தர்யாமியாக விளங்கும் ஈசனின் (குருவின்) வெளிப்பாடாக உணரும்போது, அந்த சொற்களின் கால அளவு முடியும்போது, அதாவது அதன் ஓசை இறக்கும்போது, ஓசை இறந்தவர் நெஞ்சினுள் விழிப்புணர்வாக, அந்தர்யாமியாக விளங்கும் ஈசன் (குரு ) உறைவார்.
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் :
அதுபோன்றே ஓம்காரத்தின் விரிவான இந்த மூன்று மாத்திரைகளில் ‘ பிராணனில்’ (உள் மூச்சில்) ஒடுங்க வேண்டிய மாத்திரையை (சொல்லை), குரு அருளால் முறையாக (हु) அறிந்து, அதை அந்த உணர்வின்கண் பொருத்தி உச்சரிக்கும் போது, அச் சொல்லின் கால அளவு முடியும்போது, அதாவது அதன் ஓசை இறக்கும்போது, ஓசை இறந்தவர் அந்தர்யாமியாக விளங்கும் ஈசனோடு (குருவுடன் ) விழிப்புணர்வாக உறைவார்.
ஓசை உணர்ந்த உணர்விது வாமே:
ஈசனருளால் (குருவருளால்) மாத்திரைகள் என்னும் காலம் அற்ற, ஓம்கார ஓசையை (ॐ) இவ்வாறாக தம்முள் ஒடுங்கப் பெற்றவரிடமிருந்து வெளிப்படும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வு என்பதும் இதுவே ஆகும்.
திருச்சிற்றம்பலம் 🙏

