
பண்டைய Vigyan Bhairava Tantra வின் ஆறாவது சூத்திரத்தில், தேவியின் விழிப்புணர்வை அடைவதற்கான மற்றொரு ஆழ்ந்த முறையை சிவன் வெளிப்படுத்துகிறார்:
“ஒலியை முழு கவனத்துடன் கேள்.
கேட்பவன் மறையும் அளவுக்கு ஆழ்ந்து கேள்.”
இதன் உட்பொருள்:
“சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தம், உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் குருவின் அருளால் முறையாக ஒன்றிப் பொருந்திய பின், அந்த மந்திர நாதத்தை மட்டுமே இடைவிடாது உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தால், வெளிப்புற சப்தங்கள் இயல்பாகவே மறைந்து போகத் தொடங்கும்.
அவ்வளவு ஆழ்ந்த கவனத்தில், கேட்பவரின் காதுகள் வெளி உலகிற்காக அல்லாது உள் நாதத்திற்காக மட்டுமே திறந்திருக்கின்றன. பின்னர், நாபிக் கமலத்தில் அமர்ந்துள்ள தேவியின் விழிப்புணர்வில் “நமசிவாய” என்னும் மந்திர நாதம் முழுமையாக ஒடுங்கி நிற்கும் போது, அந்த நாதத்தைக் கேட்டு வந்த “கேட்பவரும்” கூட தேவியின் பேருணர்வில் கரைந்து மறைந்து போய்விடுகிறார்.
அங்கு மந்திரம் இல்லை.
கேட்பவன் இல்லை.
கேட்கப்படுவது கூட இல்லை.
மீதமிருப்பது — பேரொளியான விழிப்புணர்வே.
திருச்சிற்றம்பலம் 🙏

