விஷ்ணு சகஸ்ர நாமம்-1

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“ஓம் பவித்ராய நமஹ ” என்பது விஷ்ணு சகஸ்ர நாமாவளியில் வரும் 63-வது நாமம் ஆகும், இது விஷ்ணுவின் தூய்மை படுத்தும் புனிதத்தன்மையைக் குறிக்கிறது; இதுவே “பவித்ராணாம் பவித்ரம்:”  என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் 16 வது  வருகிறது. இதற்கு பரிசுத்தமானவற்றுக்கெல்லாம் பரிசுத்தமானவர். என்று பொருள்.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை, விபூதி யோகம், சுலோகம் முப்பத்தி ஒன்றில், ‘தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாக நான் இருக்கிறேன்’ என்று அர்ஜுனனுக்கு சொல்கிறார். அவ்வகையில் காற்றே, ஒவ்வொருவர் உட்கொள்ளும் பிராண வாயுவாக,  “பவித்ரம்”  என்னும் விஷ்ணுவின் நாம அரூபமாக  இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் சுவாசித்தால், விஷ்ணு அவர்களின் அகத்தை தூய்மைப்படுத்தி பரிசுத்தமாக்கி விடுவார்!
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏

Leave a comment