“ஹோமப் பறவை”

வேத காலத்து ஹோமப் பறவை, ஆகாயத்திலேயே வாழ்ந்து, ஆகாயத்திலேயே இனப்பெருக்கம் செய்து, ஆகாயத்திலேயே  முட்டையிட்டு, முட்டைகள் பூமியை அடையும் முன், அவை குஞ்சு பொரித்து, குட்டிப் பறவை மேல்நோக்கிப் பறந்து ஆகாயத்தில் தன் தாயுடன் சேரும். அவை பூமியைத் தொடவே தொடாது.  அது பூமியில் வாழும் சாதரண மக்களின் கண்களுக்கு தென்படவே தென்படாது. அதை பார்க்கும் திறன் கொண்டவர்கள் அரிதிலும் அரிது. 

அது போன்றே அநேக ஞானிகள் பாரத தேசத்தில் இன்றும் தங்களை உலகிற்கு காட்டாமல் தனித்தே வாழ்ந்தும், சாதாரண மக்களின் கண்களில் தென்பட்டமாலும் இருக்கிறார்கள். அவர்களை ஹோமப் பறவை  போல அடையாளம் காண்பது  என்பது அரிதிலும் அரிது. ஆகர்ஷ்ண சக்தியை ஒருவர் தம்முள் பெருக்கி கொண்டால், அவர்களை காணலாம், எவ்வாறு சில நூறு வருடங்களாக பூமிக்குள் மறைந்து இருந்த ஆத்ம போதேந்திர ஸ்வாமிகள் ஸ்ரீ காஞ்சி பெரியவரின் ஆகர்ஷ்ண சக்தியால்  கண்டறியப்பட்டு வெளிப்பட்டாரோ அவ்வாறே!

Leave a comment