“சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை”

“சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை”

பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29&30. 29. அபானவாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும் ஆகுதி செய்யும் சிலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்துப் பிராணாமயத்தில் ஈடுபடுகின்றனர்.

30 “முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனை படைக்கின்றனர்”.

சொல்லாமல்: அபானவாயுவில் அல்லது வெளிமூச்சில், பிராணனின் அல்லது உள்மூச்சின் சப்தத்தை தவறாக சொல்லாமல், ஏனென்றால் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒலி உண்டு,

சொல்லியதை: குருவருளால் திருத்தப்பட்டு முறையாக பிராணனில்- உள்மூச்சில், பிராணனின் சப்தமாக சொல்லியதை, அதாவது முறையாக உண்பவராய், பிராணனில் பிராணனை படைதத்து…

நினையாமல்: ஸத்குரு வேறு, குருவருளால் திருத்தப்பட்ட பிராணனின் சப்தம் வேறு என்று நினையாமல்…

நினை: ஸத்குருவே- பிராணனின் சப்தம் அல்லது அதுவே மந்திரம்-ஸத்குரு-அருட்பெருஞ்ஜோதி என்றே நினை.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment