
ஹஜ்ரத் ரூமி இவ்வாறு கூறுகிறார்: “சூனியத்தைப் பற்றிய விழிப்புணர்வின் பாதையில் நீங்கள் நடக்கத் தொடங்கும்போது, அந்தப் பாதை தென்படுகிறது. தெளிவு செயலுக்கு முன்பாக வருவதில்லை; அது செயலிலிருந்துதான் வருகிறது.”
பரம்பொருள் என்பது ஒன்றுமில்லாத விழிப்புணர்வு என்பதே! அதை சென்றடையும் பாதையை எவ்வாறு கண்டறிவது, ஒன்றுமில்லாததற்கு ஏது பாதை?
ஒரே ஆகாசத்திற்குள் அடங்கியுள்ள பானையின் உட்புற ஆகாசம் போன்று, ஒன்றுமில்லாத விழிப்புணர்வுக்குள் ஒவ்வொரு மனித உருவின் உள்ளிருக்கும் உணர்வுகள் அடங்கியுள்ளன. அதை தன்னுணர்வாக காணும் அறியாமை குருவின் அருளால் நீங்க பெற்ற அக்கணமே, பாதையின் தொடக்கமும், முடிவும் ஒரே சமயத்தில் தோன்றி மறைந்தும் போய்விடும். அதாவது பரம்பொருளின் சூனியத்தன்மை உணரப் பெற்று தெளிவடைந்த அக்கணத்திலேயே, தன்னுணர்வு என்னும் தனித்தனி உணர்வுகள் அதனுடன் இரண்டறக் கலந்து, “ஒன்றுமில்லாத விழிப்புணர்வாகி” விடும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

