
“ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” இது மாணிக்கவாச பெருமாள் அருளிய திருவெம்பாவை பாடலின் (எட்டாம் பாடல்) ஒரு பகுதியாகும்,
ஒவ்வொருவரின் மரண காலத்தில் சளியானது, அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளபடி, பச்சைப்புயல் போன்று உருவாகி மூச்சை அடைப்பது, இது, சுவாசக் கோளாறுகளின் இறுதி நிலை. இதையே மாணிக்கவாசகர் ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள ஊழி என்றும் சுட்டிக் காட்டுகிறார்.
இத்தகைய ஊழி காலத்தில் அதுவரை ஒருவரிடம் பற்று கொண்ட அனைத்தும் தாம் பற்றிய பற்றை விட்டுவிட, அவ்- ஊழியில் முதல்வனாய், தனி ஒருவனாய், பற்றற்றவனாய் நின்று காத்தருள்வான் சிவபெருமான். எனவே அத்தகைய பற்றற்றான் பற்றினை இப்போதே பற்றுக என்பதாக, “ஊழியில் முதல்வனாய் நின்ற ஒருவனை” என்ற திருவெம்பாவை எட்டாவது பாடலில் உள்ள இவ்வரிக்கு பொருளாக கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏

