“இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை”

கேன உபநிஷத்  “அறியவில்லை என்றோ, அறிந்தேன் என்றோ”-(அன்யதேவ தத் விதிதாத்) அது அறிந்த பொருள்களை விட வேறு அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டது, என்று பிரபஞ்சமாக வெளிப்பட்ட பிரம்மத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

எனவேதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை: பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்; பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.” என்று இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

அதாவது பிரபஞ்சத்தை அறிந்து கொண்டேன் என்று கூறும் மனிதர்களும் இன்னும் பிரபஞ்சம் அறியப்படவில்லை என்று கூறும் மனிதர்களும் முட்டாள்கள் என்று உறுதியாகக் கூறுகிறார். ஆனால் அவரால் பிரபஞ்சம் அறிந்த பொருள்களை விட  வேறானதாகவும், அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருப்பதை உணர்ந்து கொண்டதால், பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறியிருக்க வேண்டும்.

இதை விளக்கவே சம்ஹார மூர்த்தியாக நின்ற சிவனின் அடியையும், முடியையும் படைப்பு கடவுளாலும், காக்கும் கடவுளாலும் காண முடியாமல் போயிற்று என்று புராண கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பிரபஞ்சமானது தோன்றும்போது அழிந்து கொண்டும் இருப்பதால் அது அறிதற்கு அரியதாய் இருந்து கொண்டு தான் இருக்கும்.

Leave a comment