திருமூலர் திருமந்திரம் உரை எண் 55 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறங்கம் ஆகக் குணம்பயில்வார்
இல்லை
வேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்
பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.

ஆறங்கமாய் வரும் மாமறை கூறங்கம் ஆக ஓதியைக் குணம்பயில்வார்
இல்லை:
ஆறங்கம்: சிவலிங்க வடிவாக அமைந்திருக்கும் இம்மானுட யாக்கையில் உள்ள மெய் வாய் கண் காது மூக்கு மற்றும் இவைகளின் அறிவாய்   விளங்கும் உணர்வு இவைகளே ஆறங்கம் ஆகும். இவைகளில் பொதிந்திருக்கும் மாமறையான ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை…
கூறங்கம்: தேகத்தில் இயங்கும் மூச்சை அதாவது வாசியை இரு கூறுகளாக ஆக்கி திருவாசியாக உள்ளுக்குள் மாற்றி, அதில் இடைவிடாது ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை முறையாக ஓதி எண்குணத்தான் என்னும் பெரும் பேற்றை அடைய முயல்பவர்கள் எவரும் இல்லை.


வேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்: மாறாக, வேறங்கம்: தன்னை விட்டு வேறு ஆறங்கம் கொண்டவர்கள் பயிலும், அதாவது ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்திற்கு வேறான உபாசனைகளை பயின்று கடைபிடிப்பவர்களை…

பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே:
மாமறை பொதிந்த தம் ஆறங்கத்தை காட்டிலும் மேன்மை பொருந்தியதாக கருதி, அவர்களை பெரிதாக போற்றி செய்து தம் வாழ்நாளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment