
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
இருக்கு உருவாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய்நின்ற கண்ணனும் ஆமே.
இருக்கு: என்னும் சொல்லுக்கு வேத மந்திரம் என்னும் பொருள் உள்ளது. அசையா நிலையில் இருக்கும் ஒருவரின் இருப்பை அறிய, அவர் உள் இழுக்கும் மூச்சை கொண்டுதான் மற்றவர்களால் அத்தகையவர்களின் இருப்பை உணர முடியும். ஆக ஒவ்வொருவரின் இருக்கு என்னும் வேத மந்திர சப்தம் கலந்த உள்மூச்சே, அவர்களின் உடம்பைப் பற்றி நிற்கும் உணர்வாக, எழில்மிகு மந்திர ரூபமாக ஆகிறது. இத்தகைய இருக்கு எனும் வேத மந்திர வழியில் நின்று சொல்லும் ஞானியர்களின் சொல்லாகவும், அனைத்தையும் அறிவிக்கும் அறிவுருவாகவும் இருக்கும் அவன் என்னுள்ளேயும் விளங்கி அருள் புரிகின்றான்.
திருச்சிற்றம்பலம்🙏

