திருமூலர் திருமந்திரம் உரை எண் 39 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 


வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியை:
பூமிக்கே உப்புக்கு ஒப்பான சாராம்சத்தை ஒருவர் தனதாக்கிக் கொள்ளும்போது தான், வாழ்த்த கூடிய வாழ்த்து என்பது,  உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒளிநெறி பெறக்கூடிய வாழ்த்தாக வல்லமை கொண்டதாக அமையும். அத்தையவர் மனத்தினில் உறையும்…

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை:
தீர்த்தன் என்றால் குரு, இறைவன் என்று பொருள். அதாவது அத்தகையவர் மனத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் குருவடிவாகிய இறைவனை… 

ஏத்தியும் எம்பெரு மான்என்று இறைஞ்சியும்:
ஒருவர் தம் வாசியின் இசையாலும் மனதில் பக்தியாலும் ஏத்தியும், இறைஞ்சுமாக…

ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே:
அதையே குருவிற்கு செய்யும் பணிவிடையாக (ஆத்தம்: என்பதற்கு குருவிற்கு செய்யும் பணிவிடை என்று பொருள்), இடைவிடாது எண்ணி செய்து கொண்டிருந்தால், ஜோதி வடிவாக இருக்கும் தீசனின் அருளைப் பெறலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment