
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.
உயிர்களின் தந்தையாகவும், குருவாகவும், தெவிட்டாத அமுதம் போன்றவனும், தனக்கு உவமை இல்லாதவனும், அருளை வாரி வழங்குபவனும், ஊழி காலத்தும் தான் அழியாதிருக்கும் மூல முதல்வனை,
தம் மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கு நேரே முறையாக குருவருள் துணை கொண்டு, சித்திகள் பற்றி எதையும் எண்ணாது, யோகத்தால் ஏத்துமின் ஏத்தினால்…
ஈசனின் பரிபூரண அருளையே வெகுமதியாக பெற்று அழியா பெருநிலையை அடையலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

