திருமூலர் திருமந்திரம் உரை எண் 28 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 
இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்:
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்சபூத வடிவாகவே இருக்கும் இறைவன,  இம்மானுட தேகத்தில் பஞ்சபூத அம்சங்களையும் முறையாக பொருந்தும் படி இணைத்து அவற்றோடு இணங்கி, அண்டம் பிண்டம் என்று எங்குமாய் இருப்பவன்.

பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்:
  எனினும் அண்டம் பிண்டம் என்னும் இவைகள் அற்ற பின்பும், இவைகளின் தோற்றத்திற்கு முன்பும், அதாவது இவைகளில் இருந்து வேறுபடுபவனாக தூய உணர்வாகியும் நிற்கின்றான்.

உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே:
இவ்வாறு எல்லாவற்றிலும் உறைந்தும், மறைந்தும் நிற்கும் அமரத்துவத்திற்கு பதியான நாதனை தன்னுள் முழுமையாக உணர்ந்து  வணங்கி நிற்பவருக்கே, வழிகாட்டியாக இருந்து இறுதிவரை துணையாக நிற்பான்.
திருச்சிற்றம்பலம் 🙏