திருமூலர் திருமந்திரம் உரை எண் 26 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று:
வாசியில் இயங்கும் சூரிய கலையும், சந்திர கலையும்  கூடும் தாமரையை ஒத்த நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் அந்தமில்லா ஈசனை,
சூரியனும் சந்திரனும் சந்திக்கும்  அந்தி மாலை பொழுதில், அவ்-ஈசனின் அருள், இத்தேகம் முழுவதும் பரவ வேண்டும் என்னும் பக்தி சிந்தனையோடு,

நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே:
நந்தியால் நாளும் வணங்கப்படும் அவனை, தம் வாசியில் சிவமாக சந்தி வேளையில் வணங்கி வருபவர்களின் அறிவினில் அறிவாக உறைந்து நின்றானே!
திருச்சிற்றம்பலம்🙏