மதம் இல்லாத அறிவியல் நொண்டி

“Science without religion is lame, religion without science is blind.” -Albert Einstein
“மதம் இல்லாத அறிவியல் நொண்டி, அறிவியல் இல்லாத மதம் குருட்டு.” -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு?
அறிவியல் என்பது பிரபஞ்சத்தை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவது, அது சமுத்திரம் போன்றது. ஆன்மீகம் என்பது ஆன்மாவின் ரகசியங்களை வெளிப்படுத்துவது,

இது சமுத்திரத்தில் உள்ள ஒரு நீர் துளி போன்றது. ஓர் நீர் துளியை பற்றி ஆராயும் போது சமுத்திரத்தின் தன்மை அதில் வெளிப்படாமல் போகாது, அதுபோன்றே சமுத்திரத்தை பற்றி ஆராயும் போதும் அதில் ஓர் நீர் துளியின் தன்மை அடங்கியே இருக்கும்.

அது போன்றே பிரபஞ்சத்தை பற்றிய அறிவியல் உண்மைகளின் வெளிப்பாட்டில் ஆன்மாவை பற்றிய ரகசியமும் பொதிந்து தான் இருக்கும், அதாவது “பிண்டம் இல்லாத அண்டம்” என்பது ஒரு நொண்டி போன்றது.

ஆன்மாவை பற்றிய ரகசியங்கள் வெளிப்படும் போது அதோடு இப் பிரபஞ்சத்தை பற்றிய அறிவியல் உண்மைகளும் கலந்தே வெளிப்படும், அதாவது “அண்டம் இல்லாத பிண்டம்” என்பது குருட்டுக்கு ஒப்பானது.

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே.
ஸ்ரீ குருப்யோ நமக🙏