
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
“காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே”.
ஆயம் கத்தூரி: கருமை நிற கஸ்தூரி ஒருவித வாசனை நிறைந்தது.
‘காயம்’ என்பது உடம்பைக் குறிக்கும் சொல். ‘காயம் இரண்டு’ என்பது ஒன்று தியானிப்பவனின் உருவம், மற்றொன்று தியானிக்கப்படும் வஸ்துவான ஸத்குருவின் உருவம். தியானத்தில் இவ்விரண்டும் கலக்கும் போது ஏற்படும் உஷ்ணத்தையும் தாண்டி, கஸ்தூரியின் வாசம் மிகுந்து வெளிப்படுவதே உண்மையான தியானத்தின் அடையாளமாகும். அவ்வாறு அந்த வாசனையை மிகுதியாக ஒருவர் தியானத்தில் பெரும் வழி எதுவெனில்…
எங்கும் பரவி உள்ள ஆ-காயத்தால் கோர்க்கப்பட்டுள்ள பிரணவ சப்தத்தை தியானிப்பவர், தம் காயத்துக்குள் விளங்கும் குருவின் உறவாக அதாவது ஈசனின் உறவாகவே எண்ணி தியானிக்கும் போது அக்கலவையின் கொதிப்பை விட, ஆயம் கத்தூரியின் வாசனை மிகக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்🙏

