திருமூலர் திருமந்திரம் உரை 4 ன் விளக்கம்:


“அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்தனைப் போத விட்டானை பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே”

அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை: புகலிடத்து என்தனை:
அகலிடம் என்பது பூமித்(தாயை) குறிக்கும், அண்டத்து வித்து என்பது தந்தையிடமிருந்து வெளிப்படும் உயிர் அணுவை குறிக்கும்.
தாயிடம் இருந்து வந்த உடம்பும் தந்தையிடம் இருந்து வந்த உயிரும் சேர்ந்ததே என் புகலிடம்(இருப்பிடம்) என்றிருந்த என்னை,


போத விட்டானை: போத என்றால் போதிய அளவு என்று பொருள். அதாவது கருணையால் எமக்கு அருளிய “அளவுடன் கர்மம் அதாவது பிராணனில் பிராணனை படைத்தல் என்னும்  ஞானயோகத்தைக் கொண்டு,


பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி:
பகலும் இரவும் இடைவிடாது உன் திருவடிகளை பணிந்து யோகத்தால் ஏத்தி,


இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே:
இகல் என்பதற்கு வேறுபாடு என்பது பொருள்.
உன் திருவடிகளை பணிந்து ஏத்திய யோகத்தின் மூலம் “இருக்கு இல்லை” என்னும் இருள் நிறைந்த வேறுபாடுகள் நீங்க பெற்று “இருக்கிறார் இறைவன்” என்னும் ஒளிமயமாய் நின்றேனே.
திருச்சிற்றம்பலம்🙏