
“Think of yourself as dead. You have lived your life. Now, take what’s left and live it properly.”
Marcus Aurelius
“உன்னை இறந்துவிட்டதாக நினைத்துக்கொள். உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துவிட்டாய். இனி, மிச்சமிருப்பதை எடுத்து ஒழுங்காக வாழு.”- மார்கஸ் ஆரேலியஸ்
Interpretation: ஒருவர் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டு மீண்டும் வாழ்வது என்பது சாத்தியமா என்றால், வள்ளுவர் பெருமான் இது சாத்தியமே என்று தம் திருக்குறளில்,
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று சொல்லி உள்ளார். அதாவது ஒவ்வொரு நாளும் உறக்கத்திற்கு முன் இருந்த விழிப்பு நிலையில், அன்றைய நாள் வாழ்க்கையை வாழ்ந்து விட்டதாகவே நினைத்துக் கொண்டு, உறக்க நிலையில் இறந்தது போன்றுமாகவே, ஆனால் எந்தவொரு நினைவும் இல்லாமல், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு நாளுமாக கழிந்து கொண்டிருக்கிறது.
மார்கஸ் ஆரேலியஸ் என்ற இந்த கிரேக்க தத்துவஞானி சொல்லி உள்ளது போல இறப்புக்கு ஒப்பான அந்த உறக்க நிலையில் மிச்சம் இருந்தது எது? என்று ஒருவர் அறிய முயற்சித்தால், ‘நிறைந்த அமைதி’ ஒன்றேயே (இறந்துவிட்டதான) அந் உறக்க நிலையில் தம்மால் அனுபவிக்கப்பட்டதை உணரலாம். மீண்டும் விழித்து எழுந்தவுடன் மிச்சம் இருந்த அந்த அமைதியை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்ந்தால்?’ நிரந்தர அமைதியை’ ஒவ்வொருவரும் என்றென்றும் அனுபவிக்கலாம். அதாவது அமைதி நிறைந்த வாழ்க்கை இயல்பாகவே ஒழுக்கம் உடையதாகவே இருக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ,🙏

