
“இறுதி இலக்கு”
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறினார், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு இலக்குடன் இணைக்கவும், மக்கள் அல்லது பொருட்களை அல்ல.
பகவத் கீதைஅத்தியாயம் 18:சுலோகம் 37ல், எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்வீகமாம். ஆதம நிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி இலக்கு என்பது இறுதி மூச்சு வரை பாடுபட்டு அடையும் இலக்காக அது இருக்க வேண்டும். அது ‘பிறவாமை’ என்னும் பெரும் பேற்றேயாகும். இதன் செயல்பாடுகள் முதலில் கசப்பாக தோன்றும் ஆனால் இறுதியில் ‘மக்களும் பொருட்களும் இல்லாத’ பேரின்பத்தில் நிரந்தரமாக கொண்டு சேர்த்துவிடும்.
அடுத்ததாக பகவத் கீதைஅத்தியாயம் 18:சுலோகம் 37ல், பொறி புலன்களின் பொருத்தத்தால் முதலில் அமிர்தம் போன்றிருந்து முடிவில் விஷம் போன்றாகும் சுகம் ராஜசமென்று சொல்லப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி,இதைத் தவிர இலக்காக கருதப்படும் மற்றவைகள் யாவுமே ரஜோ குணத்தில் உதிப்பவைகள், இவைகள் ஒருவிதத்தில் ஆசை வயப்பட்டதே. இதன் செயல்பாடுகள் முதலில் மக்களுடன், பொருட்களுடன் மகிழ்ச்சியாக தொடங்கினாலும் இறுதியில் இவைகள் இல்லாமல் போகும் போது துன்பத்தில் கொண்டு சேர்த்துவிடும்.
Sri gurupyo namaha 🙏🏿

